சி.பி.ஐ.யை பயன்படுத்தி எதிர்ப்பவர்களை ஜெயிலுக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சியால் முடியும் முலாயம்சிங் யாதவ் கடும் தாக்கு
Page 1 of 1
சி.பி.ஐ.யை பயன்படுத்தி எதிர்ப்பவர்களை ஜெயிலுக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சியால் முடியும் முலாயம்சிங் யாதவ் கடும் தாக்கு
எதிர்ப்பவர்களை சி.பி.ஐ.யை பயன்படுத்தி ஜெயிலுக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சியால் முடியும் என முலாயம்சிங் யாதவ் கூறினார்.
மத்திய அரசு மீது சாடல்
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொண்டது. ஆனாலும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளியிலிருந்து அளித்து வருகிற ஆதரவால் மத்திய அரசு பிழைத்து வருகிறது.இந்த நிலையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்துக்கொண்டே அதற்கு எதிராக முலாயம்சிங் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களையும் செய்து வருகிறார். குறிப்பாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, சி.பி.ஐ.யை கையில் வைத்துக்கொண்டு மிரட்டி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெற்று வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்.
ஆயிரம் கைகள்
இந்த நிலையில் நேற்று அவர் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:–காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது என்ன எளிதா? மத்திய அரசுக்கு ஆயிரம் கைகள் இருக்கின்றன. அது சி.பி.ஐ.யை பயன்படுத்த முடியும். ஒருவரை ஜெயிலுக்கு அனுப்ப இயலும்.சித்ரகூட்டில் சோஷலிச தலைவர் ராம் மனோகர் லோஹியாவை பாரதீய ஜனதா தலைவர் அத்வானி பாராட்டிப் பேசியுள்ளதாக கூறுகிறீர்கள். அவர் அப்படிச் செய்திருந்தால் அது நல்லது.நான் அத்வானியை பாராட்டியபோது ஊடகங்களில் கூச்சல் எழுப்பப்பட்டது. யார் நல்லது செய்தாலும், செய்துகொண்டிருந்தாலும் அவர் பாராட்டப்பட வேண்டும். நல்லது செய்பவர்களை துவேஷமாக பேச முடியுமா?இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலுக்கு தயாராகுங்கள்
சமாஜ்வாடி கட்சி மாவட்ட தலைவர்களின் கூட்டத்திலும் முலாயம்சிங் பேசினார். அப்போது அவர், அனைவரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனக் கூறினார். சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தவும் கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டார்.மாநில அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிற எதிர்க்கட்சிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். லேப்–டாப் கம்ப்யூட்டர் வழங்குதல் உள்பட சட்டசபை தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதாகக் கூறிய முலாயம்சிங், இது பற்றிய செய்திகள் மக்களைப் போய் அடைய வேண்டும் என்றும் கட்சியினரை வலியுறுத்தினார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான அரசை நடத்த முடியும்: ராகுல் காந்தி
» ‘3–வது அணி, கானல் நீர்; ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை’’ முலாயம்சிங் கருத்தை காங்கிரஸ், பா.ஜனதா நிராகரித்தன
» உமேஷ் யாதவ் களம் இறங்க தயார்
» சசிகுமார், அமீர் மீது கவுதம் மேனன் கடும் தாக்கு!
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» ‘3–வது அணி, கானல் நீர்; ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை’’ முலாயம்சிங் கருத்தை காங்கிரஸ், பா.ஜனதா நிராகரித்தன
» உமேஷ் யாதவ் களம் இறங்க தயார்
» சசிகுமார், அமீர் மீது கவுதம் மேனன் கடும் தாக்கு!
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum