தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Go down

 சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி  Empty சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Post  ishwarya Thu May 02, 2013 2:57 pm

எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்தியில் உள்ள ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான முறையான அறிவிக்கையும் வெளியிடப்பட்டுவிட்டது. இதனால் உள்நாட்டு சில்லறை வணிகர்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாவார்கள் என்ற குரல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் எம்.எல்.சர்மா என்ற வக்கீல், ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் மத்திய அரசின் முடிவினால் சில்லறை வர்த்தகம் அழிந்து விடும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் ஏற்கனவே விசாரணைக்கு ஏற்றது. சில்லறை வியாபாரிகளை காப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு அது மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசும் பதில் மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான பொது நல வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில் வழக்குதாரர் கருத்துக்களை கவனமாக ஆராய்ந்தோம். அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக எந்த வலுவான ஆதாரமும் அதில் இல்லை. அரசின் கொள்கை முடிவு, அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகவோ, அரசின் சட்ட விதிகளுக்கு மாறானதாகவோ, விதிகளுக்கு கட்டுப்படாததாகவோ, அறிவுக்கு பொருந்தாததாகவோ, அதிகார துஷ்பிரயோகமாகவோ இல்லாததுவரை கோர்ட்டு தலையிடுவதற்கு இல்லை.

எனவே சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அமல்படுத்துவது பற்றி மாநில அரசுகளின் முடிவுக்கு விட்டு விடுகிறோம். இந்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

நுகர்வோர்தான் மன்னர். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்னும் கொள்கை முடிவு, பொருளாதாரத்தில் இடைத்தரகர்களை விடுவிப்பதற்காகத்தான். நமது பொருளாதாரத்தை இடைத்தரகர்கள்தான் உறிஞ்சுகின்றனர். நுகர்வோர் நேரடி பலன் பெறுவதற்கு இப்படிப்பட்ட இடைத்தரகர்கள் தூக்கி எறியப்பட வேண்டியவர்கள்தான். இதுதான் அந்த கொள்கையின் நோக்கம் என்னும்போது, அதில் என்ன தவறு இருக்கிறது?

இந்திய பொருளாதாரத்தில் இடைத்தரகர்கள் சாபமாக உள்ளனர். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதி கொள்கை, நுகர்வோர் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு வழி வகை செய்துள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் கருத்து கூறினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வனிதாவிடமே மகன் இருக்கலாம்-நடிகர் ஆகாஷின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» மொஹான் பீரிஸுக்கு எதிரான வழக்கு மீண்டும் தள்ளுபடி
» புதிய தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
» 5 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய்தத் மறு ஆய்வு மனு
» நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அகற்ற 5 மாதம் ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum