தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்ணுக்கு எதிர்கால பாதுகாப்பு தரும் திருமணம்

Go down

பெண்ணுக்கு எதிர்கால பாதுகாப்பு தரும் திருமணம் Empty பெண்ணுக்கு எதிர்கால பாதுகாப்பு தரும் திருமணம்

Post  meenu Tue Jan 22, 2013 1:46 pm

ஒரு கவிஞன் கவிதை வடிக்க பெண் காரணமாகிறாள். அற்புதமான சிலை வடிக்க பெண் தான் தூண்டுகோலாகிறாள். ஓவியமும், இலக்கியமும் பெண்ணின்றி தோன்றுவதில்லை. நம் இந்திய மண்ணில் சாஸ்திரங்கள் தோன்றவும் பெண்ணே முழு முதல் காரணமாக இருந்திருக்கிறாள். ``மாத்ரு தேவோ பவ'' என்கிற வேதத்தில் பெண்ணே போற்றுதலுக்குரிய முதல் இடத்தைப் பிடிக்கிறாள்.

அத்தகைய பெண்ணை போற்றவும், அவளின் உரிமைகளை பாதுகாக்கவும் எழுந்ததுதான் நம் இந்திய தர்ம சாஸ்திரங்கள். திருமண சடங்குகள் யாவும் இந்த சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்தே நடத்தப்படுகிறது. அந்த சாஸ்திரங்களில் முதலிரவும் இடம் பிடிக்கிறது. முதலிரவு என்பது வருங்கால சந்ததியினருக்கு உறவுகளும் சமூகமும் கொடுக்கும் அங்கீகாரமாகவும், பாதுகாப்பாகவும் அமைகிறது.

நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒரு பெண்ணின் எதிர்கால பாதுகாப்பையும் சமூக அந்தஸ்தையும் உயர்த்தும் விதமாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சாந்தி முகூர்த்தம் என்பதும் ஒரு பெண்ணின் தேவை, பாதுகாப்பு, எதிர்கால சந்ததியின் வளர்ச்சி போன்றவைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்று அவர்களை கடைசிவரை காப்பாற்றும் கடமை கணவருக்கு இருக்கிறது. அந்த கடமையில் இருந்து அவர் தவற முற்படும்போது இந்த சடங்குகள் அவரை கட்டுப்படுத்துகிறது. அதை அடிப்படையாகக்கொண்டு சமூகம் அவரை தட்டிக்கேட்கிறது. சடங்குகள் அப்போது மனைவிக்கு துணையாக வருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum