தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை

Go down

வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை Empty வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை

Post  meenu Mon Jan 21, 2013 1:06 pm

இன்றைய தலைமுறையினருக்கு திருமணம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறது. காரணம் திருமணத்திற்கு பிந்தைய குடும்ப உறவுகளை குறித்த அச்சம் தான்.

திருமணமாகாதவர் வாழ்க்கையில் இருக்கும் சுகம், திருமணம் முடிந்த பின் கிடைக்காது என்பதினாலேயே பலரும் திருமணம் செய்து கொள்ள தயங்குகின்றனர். ஆனால் திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதான் பாதுகாப்பான வாழ்க்கை என்று அறிவுறுத்தியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

திருமணம் என்பது ஆண், பெண் இணைப்பிற்கான அங்கீகாரம். இதனால் பாதுகாப்பான உறவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஆன ஆத்மார்த்தமான இந்த உறவு திருமணம் ஆகாத வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியாது. திருமணமாகாதவர் வாழ்க்கையைவிட திருமண வாழ்க்கையில் நூறு சதவிகித பாதுகாப்பான உறவு கிடைக்கும்.

திருமண வாழ்க்கையில் மற்றொரு அங்கீகாரம் குழந்தைகள். இது சந்ததியை தழைக்கச் செய்யும் உன்னத வாழ்க்கை. ஆனால் திருமணமாகாமல் இருப்பவர்கள் இது மாதிரியான மகிழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது. திருமணம் என்பது உணர்வு ரீதியான உறவுக்கான வடிகால்.

என் குடும்பம், என் வாழ்க்கை என்ற உணர்வு ஏற்படும். எந்த சந்தர்ப்பத்திலும் உன்னை கைவிட மாட்டேன் என்ற உறுதியோடு இணையும் கைகள்தான் இறுதிவரைக்கும் மகிழ்ச்சியோடு இணைபிரியாமல் இருக்கும். ஆனால் திருமணம் ஆகாத வாழ்க்கையில் இதுபோன்ற உணர்வு ரீதியான உறவு ஏற்பட வாய்ப்பில்லை.

திருமணம் என்பது தனிமையை விரட்டும் அருமருந்து. திருமணத்திற்கு பின்னர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இருவரும் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum