தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனைவி – குழந்தைக்கு மாதம் ரூ 15000 ஜீவனாம்சம்! – இயக்குநர் பேரரசுக்கு உத்தரவு

Go down

மனைவி – குழந்தைக்கு மாதம் ரூ 15000 ஜீவனாம்சம்! – இயக்குநர் பேரரசுக்கு உத்தரவு Empty மனைவி – குழந்தைக்கு மாதம் ரூ 15000 ஜீவனாம்சம்! – இயக்குநர் பேரரசுக்கு உத்தரவு

Post  ishwarya Tue Apr 23, 2013 4:40 pm

மனைவிக்கும் குழந்தைக்கும் சேர்த்து மாதம் ரூ 15000 ஜீவனாம்சம் தர வேண்டும் என்று இயக்குநர் பேரரசுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் இயக்குநர் பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, விஜயகாந்த்தை வைத்து தர்மபுரி ஆகிய படங்களை இயக்கியவர்.

இவருக்கும், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சாந்திக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விருத்திகா என்ற பெண்குழந்தையும் உள்ளது.

பேரரசு உதவி இயக்குநராக இருந்தபோது இவர்களது திருமணம் நடந்தது. கல்யாணத்தின்போது சாந்தி வீட்டு சார்பில் வரதட்சணையாக நகை,பணம் கொடுக்கப்பட்டது. இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

பின்னர் பேரரசு இயக்குநராக மாறியதும், கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். சாந்தி தனது தாய் வீட்டுக்குச்சென்று விட்டார்.

2006 ம் ஆண்டு கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி பவானி நீதிமன்றத்தில் சாந்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது அவர் சரியாக ஆஜராகாததால், பேரரசுக்கு சாதகமாக விவாகரத்து வழங்கப்பட்டது.

அதன் பின்னர் 2007ம் ஆண்டு சாந்தி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தான் பழைய முகவரி கொடுத்ததால், வழக்கு விசாரணை தனக்குதெரியாமல் போய்விட்டது. எனவே விவாகரத்து வழங்கியது செல்லாது என அறிவிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கணவரைப் பிரிந்து வாழ்வதால், தானும் மகளும் மிகுந்த சிரமப்படுவதாகவும், மாதந்தோறும் தனக்கு 10 ஆயிரமும், மகளுக்கு 5,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் சாந்தி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த பவானி நீதிமன்றம், இயக்குநர் பேரரசு மனைவி, குழந்தைகளுக்கு மாதம் 15 ஆயிரம் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

பவானி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பேரரசு, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், பவானி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து, ஜீவனாம்சம் தர உத்தரவிட்டார். பேரரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
» போன மாதம் நிச்சயதார்த்தம், இந்த மாதம் முறிவு: இது பூஜா காந்தி ஸ்டைல்
» டி.ஆர், பேரரசுக்கு போட்டியாக சோனா
» ரஜினிக்கே டாட்டா... பேரரசுக்கு விழுந்த பேரிடி
»  என்னுடைய வயது 84. இறைவன் அருளால் அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள், மருமகள்கள், மாப்பிள்ளை என்று எல்லாமும் அமைந்தன. நான்கு வருடங்களுக்கு முன்பு என்னை முந்திக் கொண்டு என் மனைவி இறைவனடி சேர்ந்து விட்டாள். எங்கள் இருவரிடமும் இருந்தவை அனைத்தையும் - நகைகள் உட்பட -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum