தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புகுந்த வீட்டில் பெண்கள்

Go down

புகுந்த வீட்டில் பெண்கள் Empty புகுந்த வீட்டில் பெண்கள்

Post  meenu Mon Jan 21, 2013 2:29 pm

தற்போதுள்ள கால கட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் புகுந்த வீட்டின் பாரங்களை தான் சுமக்க வேண்டியிருக்குமோ என்று பயப்படுகிறார்கள். ஒரு பெண் வாழப்போகும் புகுந்த வீட்டில் கணவரின் தம்பி, தங்கை இருக்கலாம். அவர்கள் இளம் வயதினராக படித்துக்கொண்டிருக்கலாம்.

மாமனார், மாமியாரும் அவர்களோடு வசிக்கலாம். படிப்பு, திருமணம், சிகிச்சை போன்ற செலவுகள் நிச்சயமாக அந்த குடும்பத்தில் இருக்கும். வேலைக்குப் போகும் அந்த புதுப்பெண், `தனது வருமானமும் இனி இந்த குடும்பத்தின் மற்ற அங்கத்தினரின் தேவைகளுக்காக செலவாகுமே' என்று யோசிக்கிறார்கள்.

தனது கணவரை மட்டும் நேசித்துவிட்டு, அவரது குடும்பத்தினரை நேசிக்காத பெண்களுக்கு, அந்த குடும்பத்தில் இருக்கும் இதர அங்கத்தினர் அனைவரும் சுமைகளாத்தான் தெரிவார்கள். அப்போது தனது வருமானம் அவர்களுக்காக செலவு செய்யப்படும்போதும்- தனது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கப்படும் சூழல் ஏற்படும்போதும், அவர்கள் மீது எரிச்சல் ஏற்படும்.

இந்த எரிச்சல் சூழலில்தான் பல புதுப்பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த சூழலில் இருந்துவிடுபட்டு, கணவரை மட்டுமின்றி அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் நேசிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நேசிக்காவிட்டால், `நான் எவ்வளவு செய்தும் உங்களுக்கு திருப்தி வரமாட்டேங்கிறது' என்று சொல்லத் தொடங்கிவிடுவீர்கள்.

உங்களால் பலன் அடைகிறவர்களுக்கு திருப்தி இல்லை என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். நீங்கள் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் உருவாக்கிக்கொண்டு அன்போடு ஒருவருக்கு உதவி செய்தால் மட்டுமே அவருக்கு அது திருப்தியைகொடுக்கும்.

பணம், பொருட்கள் மட்டுமல்ல- உடல் உழைப்பாக இருந்தாலும் அதையும் நீங்கள் மகிழ்ச்சியாக, அன்பின் அடிப்படையில் வழங்கினால் மட்டுமே பெறுகிறவருக்கு அது பலனைத் தரும். நீங்கள் உங்களுக்குள்ளே உருவாக்கும் மகிழ்ச்சி அவர்களை அடைந்து அவர்களுக்குள்ளும் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும்.

நீங்கள் வருத்தப்பட்டுக்கொண்டோ, வேறு வழியில்லை செய்துதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்திலோ ஒருவருக்கு உதவி செய்ய முன்வந்தால், அது முதலில் உங்களுக்குள் கோபம், எரிச்சல் போன்ற மனநிறைவற்ற உணர்வுகளை உருவாக்கும். அந்த உணர்வுகளே உங்களால் உதவி பெறும் அவரையும் சென்றடையும்.

அதனால் யாருக்கு உதவினாலும் அதை மனநிறைவோடு செய்யுங்கள். இல்லாவிட்டால் அது, `விழலுக்கு இறைத்த நீர்போல் வீணாகிவிடும்'. மனமில்லாமல் ஒரு செயலை செய்வதற்கு பதில், `நீங்கள் எதிர்பார்க்கும் உதவியை என்னால் செய்ய முடியவில்லை' என்று நேரடியாக கூறிவிடுவது நல்லது.

புகுந்த வீட்டில் பெண்கள் விட்டுக்கொடுத்து போனால் தவறில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் குடும்பமும், தன்னை சுற்றியிருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு.......
» எண்ணெய், உப்பு போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து பெண்கள் வாங்கக் கூடாது எனக் கூறுவதுஏன்?
» எண்ணெய், உப்பு போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து பெண்கள் வாங்கக் கூடாது எனக் கூறுவது ஏன்?
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
» புகுந்த வீடு புகுந்த வீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum