தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புகுந்த வீடு புகுந்த வீடு

Go down

புகுந்த வீடு  புகுந்த வீடு  Empty புகுந்த வீடு புகுந்த வீடு

Post  meenu Thu Mar 28, 2013 12:48 pm

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புகுந்த வீடு தொடர் 200 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது. தனக்காக ஜெயிலில் அவதிப்படும் முருகனைக் காப்பாற்ற முயன்று போராடிக் கொண்டிருக்கிறான் விஸ்வநாதன். இதற்காக பாட்டியின் வீட்டுப் பத்திரத்தை வைத்து வங்கியில் போலி கையெழுத்திட்டு ரூபாய் ஐம்பது லட்சம் பெறுகிறான். இந்த விஷயம் ராதாவின் காதுகளுக்கு எட்ட, இதுநாள் வரை பெட்டிப் பாம்பாக இருந்த அவள் விஸ்வநாதனை நடுங்க வைக்கிறாள். அவனுக்கெதிராக போலீசில் புகார் கொடுக்காமலிருக்க முருகனை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். அவனும் வேறு வழியின்றி ஜெய்குமாரின் உதவியோடு முருகனை விடுவிக்கின்றான். ஆனால் இதற்காக எத்தனை பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்ளப்போகிறோம் என்பதை விஸ்வநாதன் அறிந்திருக்கவில்லை. இந்த நெருக்கடியான சூழலில் குழந்தை ஸ்வேதா தனக்கு அப்பா வேண்டும் என்று அடம் பிடிக்க, ராதா தவிக்கிறாள். பள்ளியில் நடக்கும் விழாவுக்கு தந்தையை அழைத்து வர வங்கிக்கு செல்கிறாள் ஸ்வேதா. குழந்தை ஸ்வேதாவின் கோரிக்கையை விஸ்வநாதன் ஏற்றானா? விஸ்வநாதனின் விஷயத்தில் ராதா என்ன முடிவு செய்தாள்? அனுஷாவின் இன்னொரு முகத்தை விஸ்வநாதன் அறிந்தானா? தொடரும் தொடரில் விடை கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நள்ளிரவில் ரஹ்மான் வீட்டுக்குள் புகுந்த பீஹார் இளைஞர் கைது!
» புகுந்த வீட்டில் பெண்கள்
»  ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம். இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி
»  புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு.......
» புகுந்த வீட்டில் பெண்ணிற்கு பாதுகாப்பாக இருக்கும் மாமனார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum