தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கணவர் மனைவியின் பேச்சை கேட்க வேண்டும்

Go down

கணவர் மனைவியின் பேச்சை கேட்க வேண்டும் Empty கணவர் மனைவியின் பேச்சை கேட்க வேண்டும்

Post  meenu Mon Jan 21, 2013 1:52 pm

இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே விட்டுக்கொடுத்தல் இருந்தால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியலாளர்கள். வீட்டில் மனைவியை அதிகாரம் செய்யும் ஆண்கள் ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்து மனைவியின் சொல் பேச்சு கேட்பது அவசியம்.. எந்த விசயம் என்றாலும் தனக்கேற்றார் போல நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், பெண்ணுக்கும் மனது உண்டு என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

புதியதாக முயற்சிக்கிறேன் என்ற நினைப்பில் எதையாவது செய்யப்போய் பெண்களின் வலிகளையும், துன்பங்களையும் உணராமல் இருந்துவிடுகின்றனர். இதனால் உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே தன்னைப் போல தனது துணைக்கும் விருப்பம் இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

பெண்களைப் பொருத்தவரை கணவர்தான் அவர்களின் கதாநாயகன். எனவே இருவரும் தங்களின் விருப்பங்களை மனம் விட்டுப் பேசி தேவையானதைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் இருவரின் விருப்பு, வெருப்புகளை அறிந்து கொள்ளமுடியும். இருவரும் நட்பாய் இருந்தால் குடும்ப உறவில் விரிசல் எழ வாய்ப்பில்லை.

மதிக்கப்படுகிறோம் என்று மனைவியும் மகிழ்ச்சியடைவார். தம்பதியர் இடையே மனதளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பது குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். இது இருமனங்களுக்கு இடையேயான இருக்கத்தை நீக்கும். தன்னை தன் கணவர் புரிந்து கொள்கிறார் என்பதே மனைவியை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.

திருமணத்திற்கு முன்பு இருந்த குடும்ப சூழ்நிலை வேறு. திருமணத்திற்குப் பின்னர் பிறந்த குடும்பத்தில் இருந்து தனது உறவுகளையும், விருப்பங்களையும் முழுவதுமாக விட்டு விட்டு கணவரின் குடும்பத்திற்குள் வருகின்றனர். அவர்களை அடிமைப்படுத்தாமல் சுதந்திர உணர்வோடு செயல்பட விடுவது பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

ஒரு சிலர் பெண்களை தாம்பத்ய உறவிற்காகவும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் போலவும் நினைத்து நடத்துவார்கள். இது தவறான நடைமுறை. இதனால் கணவன், மனைவி இருவருமே சந்தோசமாக இருக்க முடியாது.

வாழ்க்கைத் துணைவியை கடவுள் தந்த வரம் என நினைத்து அவரை போற்றினால் உங்களின் வாழ்க்கையை வசந்தமாக்குவது நிச்சயம். மனைவியை உங்கள் மனதின் வடிவமாக நினைத்து கொண்டாடுங்கள். அப்புறம் என்ன உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீசும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் பேச்சை நானே கேட்க மாட்டேன்: தீபிகா “பஞ்ச்
»  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» ‘நினைத்தாலே இனிக்கும்’: கேட்க கேட்க ருசித்த பாடல்கள்!
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum