தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யுவராஜ் சிங் அழுததும் நானும் அழுதுவிட்டேன்: ஷில்பா ஷெட்டி

Go down

யுவராஜ் சிங் அழுததும் நானும் அழுதுவிட்டேன்: ஷில்பா ஷெட்டி Empty யுவராஜ் சிங் அழுததும் நானும் அழுதுவிட்டேன்: ஷில்பா ஷெட்டி

Post  ishwarya Fri Apr 19, 2013 2:32 pm

மும்பையில் நடந்த உலககோப்பை பைனலில் இந்திய அணி, இலங்கையை வென்று கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை உலகமுழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக மும்பையில் நடந்த பைனல் போட்டியை காண பிரபல தொழில் அதிபர்கள் முதல் பாலிவுட் உள்ளிட்ட பல்வேறு திரைநட்சத்திரங்கள் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றவுடன் மகிழ்ச்சியில் இந்திய வீரர் யுவராஜ் சிங் கண்ணீர் விட்டு அழுதார். யுவராஜ் சிங் அழுததும் நானும் அழுதுவிட்டேன் என்று உணர்ச்சி போங்‌க கூறுகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.

இதுகுறித்து போட்டியை நேரில் கண்டுகளித்த நடிகை ஷில்பா ஷெட்டி கூறியதாவது, இந்திய அணி வெற்றி பெற்றதும் என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவில்லை. இது ஒரு அருமையான தருணம். இந்திய அணி வெற்றிப்பெற்றதும் யுவராஜ் ஆனந்த கண்ணீர் வடித்தார். இதை பார்த்ததும் என்னை அறியாமலேயே நானும் அழுதுவிட்டேன். இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 28 வருடங்களுக்கு முன்பு, இந்திய அணி முதல் உலக கோப்பையை வென்ற போது எனது தந்தை ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இதனை நான் இப்போது நினைத்து பார்க்கின்றேன். அதேபோன்ற உணர்வு மீண்டும் ஒருமுறை கிடைத்துள்ளது. இந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாது. இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum