தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிக பாடல்களை எழுதிய நா. முத்துக்குமார் சாதனை!

Go down

அதிக பாடல்களை எழுதிய நா. முத்துக்குமார் சாதனை! Empty அதிக பாடல்களை எழுதிய நா. முத்துக்குமார் சாதனை!

Post  ishwarya Tue Apr 09, 2013 11:41 am

2011ம் ஆண்டில் மிக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமையைப்
பெற்றுள்ளார் பிரபல கவிஞர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார். தமிழ்
சினிமாவில் நிலையான இடத்தைப் பிடித்த இளம் கவிஞர்களில் ஒருவராகத்
திகழ்கிறார் நா. முத்துக்குமார்.
இந்த 2011ம் ஆண்டு மட்டும் அவர் பாடல் எழுதியுள்ள படங்களின் எண்ணிக்கை
38. இவற்றில் 12 படங்களின் முழுப் பாடல்களையும் முத்துக்குமாரே
எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 98 பாடல்களைத்
தந்துள்ளார் நா. முத்துக்குமார். இந்த ஆண்டு ஹிட்டான அவரது பாடல்களில்
முக்கியமானவை உன் பேரே தெரியாதே, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய்…, கோவிந்த
கோவிந்தா… (எங்கேயும் எப்போதும்), ஆரிரரோ…, விழிகளில் ஒரு வானவில்…
(தெய்வத் திருமகள்), வாரேன் வாரேன்… (புலிவேசம்), விழிகளிலே விழிகளிலே…
(குள்ளநரிக் கூட்டம்) போன்றவை. அதேபோல அதிக இசையமைப்பாளர்களுடன்
பணியாற்றியவரும் முத்துக்குமார்தான்.

2012ம் ஆண்டில் வெளியாகவிருக்கும் ஏகப்பட்ட படங்களில் எழுதிக்
கொண்டிருக்கிறார் முத்துக்குமார். பில்லா 2, நண்பன், வேட்டை, ஒரு கல் ஒரு
கண்ணாடி, அரவான், தாண்டவம் என முக்கிய படங்களில் அவர்தான் பாடலாசிரியர்.

மொத்தம் 58 படங்கள் இப்போது கைவசம் உள்ளன. கொலவெறியோடு
புறப்பட்டிருக்கும் புதிய பாடலாசிரியர்களுக்கு மத்தியில் அழகான தமிழ்
வார்த்தைகளுடன் அர்த்தமுள்ள பாடல்களைத் தரும் முத்துக்குமாரின் பயணம்
தொடரட்டும்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum