தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வசந்தபாலனுக்கு அஞ்சலியின் நன்றிக்கடன்!

Go down

வசந்தபாலனுக்கு அஞ்சலியின் நன்றிக்கடன்! Empty வசந்தபாலனுக்கு அஞ்சலியின் நன்றிக்கடன்!

Post  ishwarya Mon Apr 08, 2013 1:59 pm

வசந்தபாலன் என்னை ஒரு கூட்டத்தில் ஓரமா வந்து நில்லுன்னு சொன்னாலும்
நிற்பேன், அதுதான் அவருக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன், என்று நடிகை
அஞ்சலி கூறியுள்ளார். வரலாற்றுக் கதையம்சத்துடன் டைரக்டர் வசந்தபாலன்
இயக்கியிருக்கும் படம் அரவான். இம்மாதம் ரிலீஸ் ஆகவிருக்கும் இப்படத்தில்
நடிகர் பரத்தும், நடிகை அஞ்சலியும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள்.
வசந்தபாலனின் அங்காடித்தெரு படம் மூலம் பேசப்பட்டவர் அஞ்சலி. மிகப்பெரிய
பிரேக் கொடுத்த வசந்தபாலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்தயார் என்று
ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியிருக்கும் அஞ்சலி, அரவானில் கெஸ்ட் ரோல்
கொடுத்ததற்காக தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், “அரவான்” படத்துல நான் கெஸ்ட்
ரோல் பண்ணியிருக்கேன். ஹீரோயினா நல்ல மார்க்கெட் இருக்கிறப்ப ஏன் கெஸ்ட்
ரோல்ல எல்லாம் நடிக்கிறன்னு நிறைய பேர் கேட்டாங்க. அது கெஸ்ட் ரோலா
இருந்தாலும் எல்லாராலயும் பேசப்படுற முக்கியமான ரோல்னு சொல்லிதான்
வசந்தபாலன் சார் என்ன நடிக்கவே கூப்பிட்டார். பரத்தும் கூட அரவான்ல என்னை
மாதிரியே ஒரு கெஸ்ட் ரோல்லதான் நடிச்சிருக்கார். அது முக்கியமான ரோலா
இல்லையாங்கிறது ரெண்டாவது விஷயம். பரத்துக்கு வெயில்லயும் எனக்கு
அங்காடிதெருவுலயும் அவர் கொடுத்த பிரேக்குக்கு ரெண்டு பேரும் கூட்டத்துல
ஒரு ஓரமா வந்து நில்லுங்கன்னு சொன்னாக்கூட நிக்கனும். எனக்கு இப்படியொரு
இடத்தை கொடுத்த அவருக்கு, நன்றிக்கடனை இப்படி செலுத்துறதா
நினைச்சுக்கிட்டேன், என்று கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum