தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். போட்டிக்கான பாதுகாப்பு கட்டணத்தை செலுத்த தவறினால் கிரிக்கெட் சங்கங்களின் சொத்துக்களை அரசு ஜப்தி செய்யலாம் மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Go down

 ஐ.பி.எல். போட்டிக்கான பாதுகாப்பு கட்டணத்தை செலுத்த தவறினால் கிரிக்கெட் சங்கங்களின் சொத்துக்களை அரசு ஜப்தி செய்யலாம் மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு  Empty ஐ.பி.எல். போட்டிக்கான பாதுகாப்பு கட்டணத்தை செலுத்த தவறினால் கிரிக்கெட் சங்கங்களின் சொத்துக்களை அரசு ஜப்தி செய்யலாம் மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Post  amma Thu Apr 04, 2013 6:01 pm



ஐ.பி.எல். போட்டிக்கான பாதுகாப்பு கட்டணத்தை செலுத்த தவறினால் கிரிக்கெட் சங்கங்களின் சொத்துக்களை மராட்டிய அரசு ஜப்தி செய்யலாம் என்று மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

ரூ.9 கோடி கட்டண பாக்கி

மும்பை ஐகோர்ட்டில் சந்தோஷ் பச்லாக் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், 2010–11–ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கிய வகையில், மராட்டிய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.9 கோடி கட்டண தொகையை பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் இன்னமும் பாக்கி வைத்துள்ளன. அந்த நிலுவை தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.அந்த மனு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஏ.பி.பாங்கலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அதிரடி உத்தரவு

அப்போது நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:–ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பு கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் கிரிக்கெட் சங்கங்கள், வரும் 18–ந் தேதிக்குள் பாக்கி தொகையை அரசுக்கு வழங்க வேண்டும்.ஒருவேளை அவர்கள் கட்டண பாக்கியை செலுத்தாவிட்டால், சட்டப்படி நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி அரசு பரிசீலிக்கலாம். அவர்களின் சொத்துக்களை அரசு ஜப்தி செய்வதற்கு சட்டம் அனுமதிக்கிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.பின்னர் வழக்கின் அடுத்த விசாரணை வரும் 18–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஏலத்தில் விட எதிர்ப்பு

இதற்கிடையே ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்களை ஏலத்தில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி லோக் மஞ்ச் என்ற தொண்டு நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.அதில் மனிதர்களை ஏலத்தில் விடுவது கொடுங்கோன்மை ஆனது. மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தை மீறியது. எனவே விளையாட்டு வீரர்களை ஏலத்தில் விடுவதை நிறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது வரும் 25–ந் தேதி விசாரணை நடைபெறும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  6 ஊழியர்கள் இறந்த வழக்கு: பிரதீபா காவேரி கப்பல் உரிமையாளர், இயக்குனர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு
» தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு
» தி.மு.க பிரமுகர் கடத்தப்பட்ட விவகாரம்: சாத்தூர் ராமச்சந்திரன் சரண் அடைய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
» அஞ்சலி வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: போலீஸ் கமிஷனர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்
» சர்ச்களில் சிறுமிகள் பலாத்காரம்! விசாரணைக்கு அதிரடி உத்தரவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum