தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

6 ஊழியர்கள் இறந்த வழக்கு: பிரதீபா காவேரி கப்பல் உரிமையாளர், இயக்குனர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

Go down

 6 ஊழியர்கள் இறந்த வழக்கு: பிரதீபா காவேரி கப்பல் உரிமையாளர், இயக்குனர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு  Empty 6 ஊழியர்கள் இறந்த வழக்கு: பிரதீபா காவேரி கப்பல் உரிமையாளர், இயக்குனர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

Post  amma Thu Apr 04, 2013 6:19 pm



பிரதீபா காவேரி சரக்கு கப்பலில் இருந்து கடலில் விழுந்து 6 ஊழியர்கள் இறந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் மற்றும் இயக்குனர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

தரை தட்டிய கப்பல்

சென்னை துறைமுகம் அருகே பிரதீபா காவேரி என்ற சரக்கு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 31–ந் தேதி வீசிய நீலம் புயலில் அந்த கப்பல் இழுத்துச் செல்லப்பட்டு, பட்டினப்பாக்கம் பகுதியில் தரை தட்டி நின்றுவிட்டது.அப்போது கப்பல் சிப்பந்திகள் சிலர் உயிர் காக்கும் படகு மூலம் தப்பிக்க முயன்றனர். அவர்களில் நிரஞ்சன் உள்பட 6 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க கப்பல் நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உரிமையாளர் மீது வழக்கு

இதுசம்பந்தமாக சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கப்பல் உரிமையாளரும், நிர்வாக இயக்குனருமான சுனில் ஆனந்தராவ் பவார், இயக்குனர்கள் மதன் ஆனந்தராவ் பவார், சுகாஷ் ஆனந்தராவ் பவார், சுரேஷ் ஆனந்தராவ் பவார், நீல்கந்த் பால்கிருஷ்ண வித்வான்ஸ், கேப்டன் சச்சின் கேசவ் சவான், கேப்டன் சுனில்குமார் ராய், அவினாஷ் மோகன், வேத் பிரகாஷ் சர்மா, சஞ்சய் சரத் டால்பி ஆகியோர் உள்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கைது

இந்த வழக்கில் மதன் ஆனந்தராவ் பவார், சுரேஷ் ஆனந்தராவ் பவார் ஆகியோர் கடந்த மார்ச் 5–ந் தேதி கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். மற்ற 10 பேரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களை நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

எரிபொருள் இல்லை

கப்பலில் நடந்த ஆரம்பகட்ட ஆய்வு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை பார்க்கும்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தவறுகள் இருப்பது தெரிய வருகிறது. சம்பவம் நடந்த அன்றுகூட கப்பலில் போதிய அளவில் எரிபொருள் இல்லை.மேலும், அங்கிருந்தவர்களுக்கு தேவையான உதவிகளை கப்பல் நிறுவனம் செய்யவும் இல்லை. கப்பல் நிறுவனத்தின் மாஸ்டர் மற்றும் கேப்டன் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடலை பார்க்கும்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தவறு செய்திருப்பதாக தெரிகிறது.

முன்ஜாமீன் மறுப்பு

இவர்களின் தவறால் கப்பல் சிப்பந்திகள் 6 பேர் இறந்துவிட்டனர். இதுவரை கைது செய்யப்படாதவர்களை கைது செய்து, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அந்த கப்பலும் பயணத்துக்கு உகந்ததாக இருந்ததாக தெரியவில்லை.எனவே அரசு தரப்பின் கோரிக்கையில் நியாயம் இருப்பதை கோர்ட்டு உணர்கிறது. இந்த வழக்கின் உண்மை மற்றும் சூழ்நிலைகளை பார்க்கும்போது, சுனில் ஆனந்தராவ் பவார், சுகாஷ் ஆனந்தராவ் பவார், நீல்கந்த் பால்கிருஷ்ண வித்வான்ஸ், சச்சின் கேசவ் சவான், அவினாஷ் மோகன், வேத் பிரகாஷ் சர்மா ஆகியோருக்கு முன்ஜாமீன் மறுக்கப்படுகிறது.

போலீசில் ஆஜராக வேண்டும்

மதன் ஆனந்தராவ் பவார், சுரேஷ் ஆனந்தராவ் பவார் ஆகியோர் கடந்த ஒரு மாதமாக ஜெயிலில் இருந்துவிட்டனர். எனவே அவர்கள் மேலும் ஜெயிலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சைதாப்பேட்டை 9–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற வேண்டும்.மறு உத்தரவு வரும்வரை சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை 10.30 மணிக்கு சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும். சுனில்குமார் ராய் மற்றும் சஞ்சய்சரத் தல்பி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சுனில்குமார் ராய் தரப்பில் வக்கீல் சதீஷ் சுந்தர் ஆஜரானார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க பிரமுகர் கடத்தப்பட்ட விவகாரம்: சாத்தூர் ராமச்சந்திரன் சரண் அடைய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
» பிற மொழிகளில் மெரினா படத்தை டப்பிங் செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு
» சோனா பாலியல் பலாத்கார வழக்கு: எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்
» தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு
» அஞ்சலி வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: போலீஸ் கமிஷனர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum