தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யோகா பயிற்சியால் மன அமைதி பெற்றேன்: ஸ்ரேயா

Go down

யோகா பயிற்சியால் மன அமைதி பெற்றேன்: ஸ்ரேயா Empty யோகா பயிற்சியால் மன அமைதி பெற்றேன்: ஸ்ரேயா

Post  ishwarya Sat Mar 30, 2013 12:21 pm

ஸ்ரேயா சினிமாவில் அறிமுகமாகி பத்து வருடங்கள் ஆகிறது. தற்போது நடிப்போடு சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். யோகா பயிற்சியும் செய்கிறார். ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:-

சினிமாவில் இந்த அளவுக்கு நான் உயர்ந்து இருப்பது மலைப்பாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து விட்டேன். பெரிய நடிகர்கள், பிரபல இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். நல்ல கதைகள், சிறந்த கேரக்டர்களில் நடித்துள்ளேன். ரசிகர்கள், பொது மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைவிட எனக்கு என்ன வேண்டும்.

நடிக்க வராமல் இருந்திருந்தால் டான்சர் ஆகி இருப்பேன். நிறைய படிக்க வேண்டும், பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை சிறு வயதில் இருந்தது. சினிமாவுக்கு வந்ததால் அது நிறைவேறாமல் போய்விட்டது.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் நாவல் ‘மிட் நைட் சில்ரன்’ என்ற பெயரில் படமாகி உள்ளது. அந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். சல்மான் ருஷ்டி நாவல்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

யோகா பயிற்சியில் ஈடுபடுகிறேன். நடிகை அமலாதான் என்னை யோகா பயற்சியில் ஈடுபடுத்தினார். அதை கற்ற பிறகு மனம் அமைதியாகி விட்டது. நம்மை யார் என்பதை நமக்கு உணர்த்துவது யோகாதான். சமூக சேவை பணிகளில் ஆர்வம் உள்ளது. ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன். கண் பார்வை இழந்தோருக்கும் உதவுகிறேன்.

இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum