திருப்பாவை - 1
Page 1 of 1
திருப்பாவை - 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர்ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான் பாரோர்
புகழ்ப் படிந்தேலோர் என்பவாய்
பொருள்.....
அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் பெண்களே ஆயர்பாடியில் பிறந்த செல்வ சிறப்பு மிக்க சிறு பெண்களே இன்றைக்கு மார்கழி மாதத்தின் முழு நிலவு தோன்றும் நாள். கூர்மையான வேல் உள்ளவன் கொடுமையான போர் தொழிலைச் செய்யும் நத்நகோபனின் மகனும், அழகு மிக்க கண்களையுடைய யசோதைக்கு இளஞ்சிங்கம் போன்றவன், கருத்த திருமேனியில் சிவந்த கண்கள் உள்ளவன், சூரியன் மற்றும் சந்திரனை போன்ற முகத்தையும் உடையவன் ஸ்ரீமன் நாராயணன். அவனை புகழ்ந்து பாடினால் நாம் விரும்பிய வரத்தை அவன் தருவான். அதனால் உலகில் உள்ள அனைவரும் புகழ்ந்துரைக்கும் படி நீராட வாருங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum