தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பாவை -6

Go down

திருப்பாவை -6 Empty திருப்பாவை -6

Post  meenu Thu Mar 28, 2013 4:20 pm


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ எம்பாவாய்!

பொருள்....

பெண்ணே பொழுது விடிந்து விட்டது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன. பறவைகளின் அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட பெருமாளின் கோவிலில் இருந்து வெண்மை நிறமுடைய சங்கின் முழங்குகின்ற ஒலியை நீ கேட்கவில்லையா? தூக்கத்திலிருந்து எழுந்துதிரு. பூதகி என்னும் அரக்கியின் மார்பகத்தில் சுரந்த நச்சுப் பாலைக் குடித்து அழித்கவன். சக்கரத்தின் உருவில் வந்த சகடா சூரனை தன் கால்களால் உதைத்துக் கொன்றவன். திருப்பாற் கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது அயர்ந்து தூங்குபவன். இவ்வளவு சிறப்புகளும் பொருந்திய திருமாலை யோகிகளும், முனிவர்களும் விழித்தெழுந்து அரி அரி என்று குரல் எழுப்பி வணங்குவது எங்கள் உள்ளங்களை யெல்லாம் குளிர்ச்சியடைய வைக்கிறது. ஆனால் நீ இன்னும் தூங்குகிறாயே. எழுந்து வா
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum