தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முடிச்சூர் வித்யாம்பிகை கோவில்

Go down

முடிச்சூர் வித்யாம்பிகை கோவில் Empty முடிச்சூர் வித்யாம்பிகை கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 10:32 pm

ஸ்தல வரலாறு...

முடிச்சூரில் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஸ்ரீவித்யாம்பிகை கோவில் உள்ளது. இந்த ஊரில் வைணவ நெறியை பரப்பும் வகையில் ஸ்ரீமான் அமப்பாரியர் சுவாமிகள் வாழ்ந்து வந்த போது பெருமாளின் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை ஓலைச் சுவடிகள் மூலம் ஒன்று சேர்த்து அச்சு வடிவம் செய்ய உதவினார்.

இவ்வாலயத்தில் சிவாலய பரிவார தேவதைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதர பெருமாளுக்கும், யோக ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இவ்வாலயத்தை சுத்தப்படுத்த தோண்டிய போது திருமண கோலத்தில் பார்வதி பரமேஸ்வரன் காட்சி தரும் சிலை கிடைத்தது.

இச்சிலையை தேவியின் சன்னதியின் முன் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.இந்த ஆன்மீகப் பணி இந்த தலத்தில் முடித்து வைத்ததால் இந்த ஊர் முடிச்சூர் என்னும் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில் தாமோதரப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார்.

சைவமும், வைணவமும் ஒன்று சேர்ந்து ஹரியும், சிவனும் ஒன்றே என்ற மனப்பான்மையை உண்டாக்குகிறது. எந்த தோஷத்தினாலும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் இந்த ஆலயம் வந்து ஸ்ரீவித்யாம்பிகையை பக்தியுடன் வணங்கி மஞ்சள் தாலி கயிறு கட்டினால் மிக விரைவில் திருமணம் கைகூடுகிறது.

நாகதோஷம் அல்லது வேறெந்த தோஷம் காரணமாகவும் திருமணம் தடை ஏற்பட்டாலும் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைய வேண்டுவோரும் இத்தலத்திற்கு வந்து பீமேஸ்வரரையும், வித்யாம்பிகையையும் வழிபட்டு கோவிலில் கொடுக்கும் கொம்பு மஞ்சளை தேவியின் சன்னதியில் பிரார்த்தனை செய்து கொண்டு கட்டுவது வழக்கமாக உள்ளது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum