தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள்

Go down

திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள் Empty திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள்

Post  meenu Tue Mar 26, 2013 6:09 pm

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தின் உள் பகுதியில் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால் கடை வியாபாரம் பாதிக் கப்படுவதாக வியாபாரி கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குறைதீர்ப்பு கூட்டம்

திருப்பூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குனர் சம்பத் முன்னிலை வகித் தார். கூட்டத்தில் திருப்பூர் மாநக ராட்சி கடைவியாபாரிகள் பேரவை தலைவர் முத்துசாமி, செயலாளர் ரா.முத்துசாமி ஆகியோர் தலைமையில் 20க் கும் மேற்பட்ட கடை வியா பாரிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்ப தாவது:

வியாபாரம் பாதிப்பு

திருப்பூர் பழைய பஸ் நிலை யத்துக்கு வரும் பஸ்கள் முறை யாக அதற்கான ரேக்குகளில் நிறுத்தப்படுவது இல்லை. பஸ் நிலையத்தின் மேற்கு கடைசி யில் சைக்கிள் நிறுத்தம் முதல் கழிப்பறைகள் முன் வரை அனைத்து பஸ்களும் தாறு மாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் மாநகராட்சியில் கடை வாடகைக்கு எடுத்து நடத்தும் எங்களுக்கு எந்தவித வியாபாரமும் இல்லை. மாதந் தோறும் கடை வாடகை தொகையை மாநகராட்சி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

பஸ்கள் எந்த மார்க்கமாக செல்கிறது என்ற ஊர் பெயர்களை பஸ் நிலையத்தில் எழுதி வைக்க வேண்டும். நகர பஸ்களை பஸ் நிலையத்தின் வடபுறம் உள்ள 1 முதல் 15 கடைகள் முன்புறம் உள்ள ரேக்குகளில் நிறுத்த வேண் டும். பஸ் நிலையத்தின் உள்பகுதியில் தரைத்தளம் வேலை செய்யப்பட்ட போது திருச்சி, மதுரை மார்க்கமாக செல்லும் 120 பஸ்கள் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப் பட்டன. அங்கிருந்து அந்த பஸ்கள் இயக்கப்பட்டு வரு கிறது. தற்போது பஸ் நிலையத்துக்குள் பணிகள் முடிந்த பின்னரும் புதிய பஸ் நிலையத்தில் இருந்தே திருச்சி, மதுரை பஸ்கள் இயக்கப்படு கிறது.

கடைகள் மூடல்

எனவே திருச்சி, மதுரை வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் குறைந்தது 20 பஸ்களையாவது திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும். இதுகுறித்து மேயர், போக்கு வரத்து துறை அதிகாரிகள், போலீசாரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் இதை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். முன்னதாக கடை வியா பாரிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க வரும் முன் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் உள்புறம் உள்ள 31 கடை களையும் மூடி விட்டு அதன் பிறகு மனு கொடுக்க வந்தனர். இதனால் பழைய பஸ் நிலையத்தின் உள்புறம் உள்ள கடைகள் மூடப்பட்டு இருந் தன.

டாஸ்மாக் கடை வேண்டாம்

திருப்பூர் மாவட்டம் அவி னாசி தாலுகா தெக்கலூர் கிராமத்துக்கு உட்பட்ட ஓம் ஆதித்யா நகர், சேரன் நகர் மற்றும் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு மழலையர் பள்ளி, அண்ண மார் கோவில், விநாயகர் கோவில் உள்ளன. இந்த நிலையில் தெக்கலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த 2210 எண் கொண்ட டாஸ்மாக் கடையை அங்கிருந்து மாற்றி எங்கள் பகுதியில் அமைப்ப தற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். குடி யிருப்பு நிறைந்த எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்கக்கூடாது என்று ஏற் கனவே மனு கொடுத்து முறை யிட்டு உள்ளோம். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும். எனவே டாஸ்மாக் கடையை இந்த பகுதியில் அமைக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum