தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்

Go down

கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர் Empty கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்

Post  birundha Thu Mar 28, 2013 12:37 am

ஸ்தல வரலாறு....

மூலவர்: – கோட்டை மாரியம்மன் (கோடீஸ்வரி மாரி)
அம்மன்: – மாரியம்மன்
தல விருட்சம்: – வேம்பு
தீர்த்தம்: – தாமரைத் தெப்பம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – திருப்போர்

இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளிய மாரியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு வலப் புறத்திலும், இடப் புறத்திலும் இன்னும் இரண்டு அம்பாள்கள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது விசேஷமான தரிசனம். சரசுவதி, லட்சுமி, சக்தி ஆகிய முப்பெரும் தேவியரும் இவ்வாறு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.

வலது புறத்தில் உள்ள அம்பாள், வெள்ளை நிறத்தில் சுயம்பு வடிவமாக இருப்பது வித்தியாசமான அம்சம். மற்றொரு மாரியம்மன் குழந்தை வடிவில் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவளது வயிற்றில், தலையில் கிரீடம் அணிந்தபடி ஒரு முகம் இருக்கிறது.

அசுரனை வதம் செய்த அம்பாள், அவனை தன்னுள் அடக்கி வைத்திருப்பதாக இந்த கோலத்தை சொல்கிறார்கள். பிரகாரத்தில் காசி விநாயகர், பாலமுருகன், நாகர், கருப்பராயர், கன்னிமார் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.

நடை திறக்கும் நேரம்....

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum