தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையில் காமன்வெல்த்

Go down

இலங்கையில் காமன்வெல்த்  Empty இலங்கையில் காமன்வெல்த்

Post  meenu Tue Mar 26, 2013 5:24 pm

பதிவு செய்த நாள் : Mar 25 | 05:40 pm


சென்னை

உலகத் தமிழர்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. செயற்குழு கூட்டம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொண்ட நிலையில், தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

300 செயற்குழு உறுப்பினர்கள்

கூட்டத்தில், எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தயாநிதிமாறன், பழனிமாணிக்கம், காந்தி செல்வன், திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி, ஹெலன் டேவிட்சன், மகளிரணி புரவலர் இந்திரகுமாரி, நடிகை குஷ்பூ, முன்னாள் மத்திய இணை மந்திரி ராதிகாசெல்வி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, பெரியகருப்பன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், பட்டிமன்ற பேச்சாளர் ஐ.லியோனி, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட சுமார் 300 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மு.க.அழகிரி, நெப்போலியன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அதே நேரத்தில், மு.க.ஸ்டாலினை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பிரச்சினையில் சிக்கிய நடிகை குஷ்பூ சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டத்தில் பங்கேற்றதுடன், முதல் வரிசையிலும் அமர்ந்திருந்தார்.

காலை 10.20 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் காலை 11.40 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, தி.மு.க. நிர்வாகிகள் 41 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:–

இந்தியா முன்னெடுக்க வேண்டும்

* மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் கவலை கொள்ளாமல், இலங்கை அரசை நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது. இது சிங்கள பேரினவாத அரசுக்கு ஊக்கமளிப்பதாகவும், தமிழினத்திற்குப் பெரும் ஏமாற்றம் தருவதாகவும் அமைந்துவிட்டது.

எனவே, மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், அமைச்சரவையில் இருந்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்தும், இனப்படுகொலை குறித்தும் நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை நடத்துவது குறித்தும், ஈழத் தமிழர்கள் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்தும், இந்தியாவே தகுந்த தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்து சென்று நிறைவேற்ற வேண்டுமென்றும் இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum