தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கு எந்த முன்னெடுப்பும் கிடையாது'

Go down

இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கு எந்த முன்னெடுப்பும் கிடையாது' Empty இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கு எந்த முன்னெடுப்பும் கிடையாது'

Post  meenu Sat Mar 02, 2013 12:21 pm

சிவில் சமூகத்தின் மீதான தனது தாக்குதல்களை தொடர்ந்து வருகின்ற இலங்கை அரசாங்கம், 2009 இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கத் தவறிவிட்டது என்று 2013 ஆம் ஆண்டுக்கான தனது உலக அறிக்கையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

அரபு வசந்தத்துக்கு பின்னரான நிலைமைகள் உட்பட, 90 க்கும் அதிகமான நாடுகளில் கடந்த வருட மனித உரிமைகள் நிலவரம் குறித்து தனது 665 பக்க அறிக்கையில் அந்த அமைப்பு ஆராய்ந்துள்ளது.

இலங்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டில் அங்கு மனித உரிமைகள் நிலவரங்களில் எந்த விதமான அடிப்படை முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

பலவிதமான சட்டங்கள் ஒழுங்குவிதிகளில் தடுத்து வைப்பதற்கான அதிகாரம் பரந்துபட்ட அளவில் நிலைத்திருப்பதாகவும், அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் குற்றச்சாட்டு எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறுபான்மை தமிழர்கள் மீது பாதுகாப்புப் படைகள் சகட்டு மேனிக்கு கைதுகள் மற்றும் சித்ரவதைகளை மேற்கொள்வதாகவும், பாலியல் வல்லுறவுகள் கூட மேற்கொள்ளப்படுவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.

ஒழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டதாக கூறப்படும் தமிழர்கள் நாடுகடத்தப்படும் போது அவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு அறிக்கை கூறியுள்ளது.

மனித உரிமைக் குழுக்களின் செயற்பாட்டால் வடக்கில் வாழும் தமிழர்கள் பல பலன்களைப் பெறும் அதேவேளையில், இராணுவ பிரசன்னம் காரணமாக அங்கு நிலைமை வழமைக்கு திரும்பாமல் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

அடிப்படை உரிமைகளின் கீழ் போர் நடந்த வடக்கு பகுதியைச் சேர்ந்த தமிழர்களின் ன் பல பிரச்சினைகளை அரசாங்கம் கையாள வேண்டியுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனரான பிரட் அடம்ஸ் கூறியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு மார்ச் மாதத்தில் வரவிருக்கும் நிலையில் இலங்கை அங்குள்ள மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்த நிறையச் செய்ய வேண்டியுள்ளது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum