தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடப்பு ஆண்டில் இதுவரை,

Go down

நடப்பு ஆண்டில் இதுவரை, Empty நடப்பு ஆண்டில் இதுவரை,

Post  meenu Mon Mar 25, 2013 2:25 pm

நடப்பு 2013–ஆம் ஆண்டில் இதுவரை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.54,045 கோடியாக அதிகரித்துள்ளது.

நிகர முதலீடு

இதில், மார்ச் மாதத்தில் இதுவரை (மார்ச் 1 முதல் 22 வரை) அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.7,547 கோடியாக உயர்ந்தது. இதே காலத்தில், மொத்தம் ரூ.57,303 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ள நிலையில், ரூ.49,756 கோடிக்கு விற்பனை செய்துள்ளன.

பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் 19–ந் தேதி அன்று முக்கிய கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்தது.

‘கார்’ எனப்படும் பொதுவரி தவிர்ப்பு எதிர் சட்டத்தை அமல்படுத்துவதை 2016 ஏப்ரல் வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. அண்மையில் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விலையை படிப்படியாக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கடந்த ஏழு மாதங்களில் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது என வெல் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஹேமந்த் மம்தானி தெரிவித்துள்ளார்.

அன்னிய நிதி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த பிறகு இருபது ஆண்டுகளில் 2012–ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக நிகர முதலீடு ரூ.1.28 லட்சம் கோடியாக உயர்ந்தது.

வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. இதன் காரணமாக, கடன்பத்திரங்களிலும் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு உயர்ந்து வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை கடன்பத்திரங்களில் இந்நிறுவனங்களின் நிகர முதலீடு ரூ.14,322 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், மார்ச் மாதத்தில் 22–ந் தேதி
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum