தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
Page 1 of 1
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவியேற்ற எஸ்.ஏ. சந்திரசேகரனுக
சென்னை, அக். 10: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை பதவியேற்றனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுககான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக கேயார் அணியைச் சேர்ந்த டி.ஜி. தியாகராஜன், டி. சிவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர்களாக பி.எல். தேனப்பன், கே. முரளிதரன் ஆகியோரும், பொருளாளராக கலைப்புலி எஸ். தாணுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோவை தம்பி, எடிட்டர் மோகன், ஆபாவாணன், ஆர்.கே. செல்வமணி, கமீலா நாசர், அமுதா துரைராஜ், சங்கிலி முருகன், வி. சேகர், ராதாரவி, கருணாஸ், ஆர். மாதேஷ், மனோஜ்குமார், பவித்ரன், சக்தி சிதம்பரம், சந்திரபிரகாஷ்ஜெயின், சித்ராலட்சுமணன், கே. ராஜன், எச். முரளி, கே. பாலு, கபார், என்.விஜயமுரளி ஆகிய 21 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், இவர்கள் அனைவரும் சங்கத் தேர்தல் அதிகாரி இப்ராஹிம் ராவுத்தர் முன்னிலையில் பதவியேற்றனர்.
தலைவராகப் பதவியேற்ற எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசியதாவது:
இந்த விழாவில், போட்டியிட்ட இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கேயாரும் கலந்துகொண்டு எனக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்த நாகரிகமான போக்கு போற்றத்தக்கது.
நேற்று வரைதான் நாம் போட்டியாளர்கள். இன்று முதல் நாம் ஒரே அணியாகச் செயல்பட்டு தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோம். தேர்தல் அறிக்கையில் நாங்கள் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவோம்.
கடந்த நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை ஒரு குழு அமைத்து பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்துவோம். தவறு செய்தவர்கள் எங்கள் அணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நியாயமான நடவடிக்கை எடுப்போம். தயாரிப்பாளர் சங்கத்தில் அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்தி கார்ப்பரேட் நிறுவனம்போல தரம் உயர்த்துவோம். சிறு தயாரிப்பாளர்களுக்கு அரணாக இருந்து தமிழ்த் திரைப்படத்துறையை செழித்தோங்கச் செய்வோம் என்றார்.
இந்த விழாவில் சுமார் 600-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை, அக். 10: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை பதவியேற்றனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுககான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக கேயார் அணியைச் சேர்ந்த டி.ஜி. தியாகராஜன், டி. சிவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர்களாக பி.எல். தேனப்பன், கே. முரளிதரன் ஆகியோரும், பொருளாளராக கலைப்புலி எஸ். தாணுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோவை தம்பி, எடிட்டர் மோகன், ஆபாவாணன், ஆர்.கே. செல்வமணி, கமீலா நாசர், அமுதா துரைராஜ், சங்கிலி முருகன், வி. சேகர், ராதாரவி, கருணாஸ், ஆர். மாதேஷ், மனோஜ்குமார், பவித்ரன், சக்தி சிதம்பரம், சந்திரபிரகாஷ்ஜெயின், சித்ராலட்சுமணன், கே. ராஜன், எச். முரளி, கே. பாலு, கபார், என்.விஜயமுரளி ஆகிய 21 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், இவர்கள் அனைவரும் சங்கத் தேர்தல் அதிகாரி இப்ராஹிம் ராவுத்தர் முன்னிலையில் பதவியேற்றனர்.
தலைவராகப் பதவியேற்ற எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசியதாவது:
இந்த விழாவில், போட்டியிட்ட இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கேயாரும் கலந்துகொண்டு எனக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்த நாகரிகமான போக்கு போற்றத்தக்கது.
நேற்று வரைதான் நாம் போட்டியாளர்கள். இன்று முதல் நாம் ஒரே அணியாகச் செயல்பட்டு தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோம். தேர்தல் அறிக்கையில் நாங்கள் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவோம்.
கடந்த நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை ஒரு குழு அமைத்து பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்துவோம். தவறு செய்தவர்கள் எங்கள் அணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நியாயமான நடவடிக்கை எடுப்போம். தயாரிப்பாளர் சங்கத்தில் அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்தி கார்ப்பரேட் நிறுவனம்போல தரம் உயர்த்துவோம். சிறு தயாரிப்பாளர்களுக்கு அரணாக இருந்து தமிழ்த் திரைப்படத்துறையை செழித்தோங்கச் செய்வோம் என்றார்.
இந்த விழாவில் சுமார் 600-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெப்சிக்கு பிலிம் புரோமோட்டர்ஸ் சங்க நிர்வாகிகள் கோரிக்கை!
» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டி
» தயாரிப்பாளர் சங்க ஓட்டு எண்ணிக்கை எப்போது?
» தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டி
» தயாரிப்பாளர் சங்க ஓட்டு எண்ணிக்கை எப்போது?
» தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்
» நவம்பர் 20 திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum