தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உயர் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது "துப்பாக்கி'

Go down

உயர் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது "துப்பாக்கி' Empty உயர் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது "துப்பாக்கி'

Post  ishwarya Sat Mar 23, 2013 12:59 pm



இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் காட்சிகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் துப்பாக்கி திரைப்படம் வியாழக்கிழமை திரையிடப்பட்டது.

இது தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ. அப்துல் ரஹீம் மனு தாக்கல் செய்துள்ளார். இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த திரைப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் வழங்கிய யு சான்றிதழை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன் ஆகியோர் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக துப்பாக்கி படத்தை நீதிமன்றத்தில் திரையிட ஏற்பாடு செய்யுமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வியாழக்கிழமை பிற்பகல் துப்பாக்கி படம் திரையிடப்பட்டது. நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன், மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, ஏ. ரமேஷ், திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பு வழக்குரைஞர் மகேஸ்வரி, அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஐ.எஸ். இன்பதுரை மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட பலர் திரைப்படத்தைப் பார்த்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து வழக்குரைஞர் சங்கரசுப்பு நீதிபதிகளிடம் தெரிவித்தார். ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து தயாரிப்பாளர் தரப்பு வழக்குரைஞர் மகேஸ்வரி நீதிபதிகளிடம் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உயர் நீதிமன்றத்தில் நாளை திரையிடப்படுகிறது விஸ்வரூபம்: 28-க்கு வழக்கு ஒத்திவைப்பு
» விஸ்வரூபம் பட விவகாரம்: கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
» துப்பாக்கி பட வழக்கு: தீர்ப்பை திரும்பப் பெற்றது உயர் நீதிமன்றம்
» துப்பாக்கி பட விவகாரம்:மார்ச் 31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தொழிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum