தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உயர் நீதிமன்றத்தில் நாளை திரையிடப்படுகிறது விஸ்வரூபம்: 28-க்கு வழக்கு ஒத்திவைப்பு

Go down

உயர் நீதிமன்றத்தில் நாளை திரையிடப்படுகிறது விஸ்வரூபம்: 28-க்கு வழக்கு ஒத்திவைப்பு Empty உயர் நீதிமன்றத்தில் நாளை திரையிடப்படுகிறது விஸ்வரூபம்: 28-க்கு வழக்கு ஒத்திவைப்பு

Post  ishwarya Sat Mar 23, 2013 12:24 pm



இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளனவா என்பது பற்றி நீதிபதி ஆய்வு செய்வதற்காக விஸ்வரூபம் திரைப்படம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை திரையிடப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கும் ஏராளமான காட்சிகள் உள்ளதாகவும், எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் விஸ்வரூபம் திரைப்படத்தை 2 வார காலத்துக்கு திரையிடக் கூடாது என்று சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் புதன்கிழமை உத்தரவிட்டார். விஸ்வரூபம் படத்தை திரையிட விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் பங்குதாரர் எஸ். சந்திரஹாசன் உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார். அவர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நீதிபதி கே. வெங்கட்ராமன் அவசர வழக்காகக் கருதி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன், விஸ்வரூபம் திரைப்படத்தை வெள்ளிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடுவதற்கான எல்லாவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இந்தச் சூழலில் கடைசி நேரத்தில் படத்தை திரையிட தடை விதித்தால் அதனால் மனுதாரருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டார்.

எனினும் அவரது இந்த வாதத்துக்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விஸ்வரூபம் திரைப்படத்தை தற்போது திரையிட்டால் அதனால் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காகவே விஸ்வரூபம் படத்தை திரையிட தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கை சரியானதே என்று அவர் வாதிட்டார்.

இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கரசுப்பு, விஸ்வரூபம் திரைப்படம் முழுவதும் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ஏராளமான காட்சிகள் உள்ளன. ஆகவே, இந்தத் திரைப்படத்தை நீதிபதி முதலில் பார்த்து விட்டு, அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை இம்மாதம் 28-ம் தேதிக்கு (திங்கள்கிழமை) ஒத்தி வைத்தார். முதலில் இந்த திரைப்படத்தை நான் பார்க்க வேண்டும்.

அதன் பிறகே வழக்கு தொடர்பாக எந்த முடிவுக்கும் நான் வர முடியும். ஆகவே, அந்தப் படத்தை சனிக்கிழமை (ஜனவரி 26) நீதிமன்றத்தில் திரையிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, இந்தப் படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் வெளியானால் அது படத்தின் தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். ஆகவே, திருட்டு வி.சி.டி.க்கள் வெளிவராமல் தடுக்க மாநில அரசும், காவல் துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum