தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மயான கொள்ளையில் ஜெயம் ரவி!

Go down

மயான கொள்ளையில் ஜெயம் ரவி! Empty மயான கொள்ளையில் ஜெயம் ரவி!

Post  ishwarya Fri Mar 22, 2013 12:43 pm

பூலோகம் படத்திற்காக கடுமையாக உடம்பை தயார் செய்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. எஸ்.பி. ஜனநாதனிடம் உதவியாளராக பணியாற்றிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இப்படத்தின் வசனங்களை ஜனநாதன் எழுதி கொடுத்து இருக்கிறார்.

இப்படத்திற்காக ஒட்டேரி சுடுகாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜெயம்ரவி அம்மன் வேடமணிந்து அணிந்து நடித்து கொடுத்து இருக்கிறார்.

இக்காட்சி குறித்து இயக்குனர் கல்யாண் கிருஷ்ணனிடம் கேட்ட போது " சென்னையில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை பற்றிய படம் 'பூலோகம்'. சென்னையில் நான்கைந்து குத்துச் சண்டை பரம்பரைகள் இருந்தன. அவர்களுக்குள் இருக்கும் பகையை குத்துச்சண்டை மூலமாக மட்டுமே தீர்த்துக் கொள்வார்கள்.

எம்.ஜி.ஆர் சிவாஜி கூட இந்த குத்துச் சண்டையை ரசித்து பார்த்தார்கள். பின்னர் படிப்படியாக மறைந்து விட்டது. ஆனால் அந்த பரம்பரைகளும், பகையும் மறையவில்லை என்பதுதான் படம். இதில் ஜெயம்ரவி பூலோகம் என்ற குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.

குத்துச்சண்டை வீரர்கள் பகை தீர்க்க மயான கொள்ளை விழாவில் தான் சபதம் எடுத்து கொள்வார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜெயம் ரவி வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் பகையை முடிக்க வேண்டும். அதற்காக மயான கொள்ளையில் அவர் சபதம் எடுப்பதை பாடல் காட்சி மூலம் வடிவமைத்து படமாக்கினோம்.

முதலில் சுடுகாடு செட் போட்டு படமாக்குவது என்று தீர்மானித்தோம். ஜெயம் ரவி தான் வேண்டாம் நான் சுடுகாட்டில் நடிக்க தயார் என்று சொன்னதால் சுடுகாட்டிலேயே படமாக்கினோம். " என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum