வீரப்பன் மனைவியுடன் டீலுக்கு தயாரான 'வனயுத்தம்' படக்குழு!
Page 1 of 1
வீரப்பன் மனைவியுடன் டீலுக்கு தயாரான 'வனயுத்தம்' படக்குழு!
உண்மைச் சம்பவங்களை தனது படங்களுக்கான கதைக்களமாக எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருகிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கடைசி நிமிடங்களை 'குப்பி' என்ற படமாகவும், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை 'காவலர் குடியிருப்பு' என்ற படமாகவும் இயக்கி, பாராட்டுகளை அள்ளியவர் இந்த ரமேஷ். இவர் இயக்கும் மூன்றாவது படம்தான் 'வனயுத்தம்'. இந்தப்படம் தமிழகம், கர்நாடகா ஆகிய இரண்டு மாநில போலீசாருக்கும் பெரும் சவாலாக விளங்கிய சந்தனக் கடத்தல் வீரப்பனின் நிஜவாழ்க்கைக் கதை. உண்மைக்கதை என்றால் படத்தின் சுவாரஸ்யத்துக்காக 5 சதவீத கற்பனையும் இருக்கும் என்கிறார் இயக்குநர். சந்தன வீரப்பன் மிகப்பிரபலமாகி போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த 90-களில் இருந்தே அவனது வாழ்க்கையை படமாக்குவது என்று முடிவு செய்து அவனைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாராம். இப்படத்திற்காக 12 ஆண்டுகள் வீரப்பனைப் பற்றி தொடந்து ஆராய்ச்சி செய்த பிறகே திரைக்கதை எழுத உட்கார்ந்தாராம் இயக்குநர் ரமேஷ். இந்தப் படத்தில் வீரப்பனாக கிஷோரும், வீரப்பனை சுட்டுப் பிடித்த போலீஸ் அதிகாரி விஜயகுமாராக, ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர 'ஆடுகளம்' பேட்டைக்காரன் புகழ் ஈழக்கவிஞர் ஜெயபாலனும் நடித்திருக்கிறார் ஒரு ரிட்டையர்டு ஆர்மி ஆபீஸராக! படத்தின் சிறப்பு அம்சம் வீரப்பன் உண்மையாக வாழ்ந்த, ஓடி ஒளிந்த காட்டுப் பகுதிகள், அவரை போலீஸார் சுட்டுக்கொன்ற இடம் என்று அவன் வாழ்க்கை கழிந்த இடங்களை தேர்வு செய்து சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களாம்.
இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்துகாக சுமார் 250 பேரை பேட்டியெடுத்திருக்கும் இயக்குநர் ரமேஷ், வீரப்பனுடன் சில ஆண்டுகள் இருந்த சிலரையும், வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாருடன் அந்த சமயத்தில் கூடவே இருந்த நாகப்பா உள்ளிட்ட சிலரையும் அதே கதாபாத்திரங்களாக அப்படியே வாழ வைத்திருக்கிறாராம்.. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக, விஜயலட்சுமி என்பவரை அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். நேற்று ஊடகத்தினரை சந்திதித்த இயக்குநர் ரமேஷ் கூறும்போது, "வீரப்பன், ராஜ்குமாரை கடத்திய சமயத்திலேயே தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று நான் பல தரப்பினரையும் சந்தித்து பேசினேன். அப்போதே வீரப்பனைப் பற்றிய படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. உண்மை சம்பவம் என்பதால், குறிப்பிட்ட ஒரு தரப்பு நியாயத்தை மட்டும் சொல்லாமல், உண்மைகளை ஆராய்ந்து, சம்மந்தப்பட்ட நபர்களிடம் பேசி என்ன நடந்ததோ அந்த உண்மையை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்." என்கிறார். இந்தப்படத்தில் முதலில் நடிக்க மறுத்த அர்ஜுன், பிறகு போலீஸ் அதிகாரி விஜயகுமார் 'நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பீர்கள்' என்று விஜயகுமாரே சொன்ன பிறகு நடிக்க சம்மதித்தாராம்! உண்மையை ஒளிக்காமல் வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்கு அதன் ரிலீஸ் சமயத்தில் தடைவாங்க தயாராகி வருகிறாராம் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. இதை அறிந்த படக்குழு அவருடன் டீல் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறதாம். அதாவது படத்தின் கதை வீரப்பன் வாழ்கை என்பதால், அவரது குழந்தையின் எதிர்காலத்துக்கு உதவி செய்ய தயார் என்கிறது படக்குழு! அது இதுனு ஒருவழியா முத்துலட்சுமிய சம்மதிக்க வச்சிடுவீங்க.. ம்ஹும்.. சினிமாக்காரங்களுக்கு இதெல்லாம் சொல்லியா தெரியணும்.......
இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்துகாக சுமார் 250 பேரை பேட்டியெடுத்திருக்கும் இயக்குநர் ரமேஷ், வீரப்பனுடன் சில ஆண்டுகள் இருந்த சிலரையும், வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாருடன் அந்த சமயத்தில் கூடவே இருந்த நாகப்பா உள்ளிட்ட சிலரையும் அதே கதாபாத்திரங்களாக அப்படியே வாழ வைத்திருக்கிறாராம்.. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக, விஜயலட்சுமி என்பவரை அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். நேற்று ஊடகத்தினரை சந்திதித்த இயக்குநர் ரமேஷ் கூறும்போது, "வீரப்பன், ராஜ்குமாரை கடத்திய சமயத்திலேயே தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று நான் பல தரப்பினரையும் சந்தித்து பேசினேன். அப்போதே வீரப்பனைப் பற்றிய படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. உண்மை சம்பவம் என்பதால், குறிப்பிட்ட ஒரு தரப்பு நியாயத்தை மட்டும் சொல்லாமல், உண்மைகளை ஆராய்ந்து, சம்மந்தப்பட்ட நபர்களிடம் பேசி என்ன நடந்ததோ அந்த உண்மையை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்." என்கிறார். இந்தப்படத்தில் முதலில் நடிக்க மறுத்த அர்ஜுன், பிறகு போலீஸ் அதிகாரி விஜயகுமார் 'நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பீர்கள்' என்று விஜயகுமாரே சொன்ன பிறகு நடிக்க சம்மதித்தாராம்! உண்மையை ஒளிக்காமல் வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்கு அதன் ரிலீஸ் சமயத்தில் தடைவாங்க தயாராகி வருகிறாராம் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. இதை அறிந்த படக்குழு அவருடன் டீல் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறதாம். அதாவது படத்தின் கதை வீரப்பன் வாழ்கை என்பதால், அவரது குழந்தையின் எதிர்காலத்துக்கு உதவி செய்ய தயார் என்கிறது படக்குழு! அது இதுனு ஒருவழியா முத்துலட்சுமிய சம்மதிக்க வச்சிடுவீங்க.. ம்ஹும்.. சினிமாக்காரங்களுக்கு இதெல்லாம் சொல்லியா தெரியணும்.......
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜேம்ஸ்பாண்டு படங்கள் தயாரான லண்டன் ஸ்டூடியோவில் ரஜினி பட சூட்டிங்
» கோர்ட்டு உத்தரவுப்படி முத்துலட்சுமி காட்சி நீக்கம்: வீரப்பன் பற்றிய வனயுத்தம் படம் 15-ந்தேதி ரிலீஸ்
» ‘டீலுக்கு’ வருவாரா நயனதாரா?
» வெளியீட்டுக்கு தயாரான மிர்ச்சி சிவாவின் "சொன்னா புரியாது'
» வனயுத்தம்
» கோர்ட்டு உத்தரவுப்படி முத்துலட்சுமி காட்சி நீக்கம்: வீரப்பன் பற்றிய வனயுத்தம் படம் 15-ந்தேதி ரிலீஸ்
» ‘டீலுக்கு’ வருவாரா நயனதாரா?
» வெளியீட்டுக்கு தயாரான மிர்ச்சி சிவாவின் "சொன்னா புரியாது'
» வனயுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum