தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்திற்கு அவசரப்படவில்லை: கரீனா கபூர்

Go down

திருமணத்திற்கு அவசரப்படவில்லை: கரீனா கபூர் Empty திருமணத்திற்கு அவசரப்படவில்லை: கரீனா கபூர்

Post  ishwarya Tue Mar 19, 2013 1:35 pm

நடிகர் சைப் அலிகானுடன் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்று நடிகை கரீனா கபூர் கூறினார். சைப் அலிகானும், கரீனா கபூரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு, சைப் அலிகான் தயாரித்து நடிக்கும் 'ஏஜென்ட் வினோத்' படம் ரீலீசுக்கு பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என இருவரும் கூறினர். 'ஏஜென்ட் வினோத்' படம் வரும் 23-ம் தேதி ரீலீசாகிறது. இந்நிலையில் நடிகை கரீனா கபூர் அளித்த பேட்டியில், நாங்கள் திருமணத்திற்கு அவசரப்படவில்லை. எங்கள் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் தான் நடைபெறும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'ஹீரோயின்' படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறேன். முதலில் அந்தப் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். நாங்கள் இருவரும் திருமண தேதியை இதுவரை அறிவிக்கவில்லை. அதற்காக அவசரப்படவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும். சைப்புடனான எனது அன்பு, சாதாரணமாக காதலில் ஈடுபடும் எந்த பெண்ணுக்கும் உரிய அன்பைப் போன்றது தான். நான் புகழ்பெற்ற நடிகை என்ற கர்வம் எல்லாம் எனது காதலில் குறுக்கிட்டதில்லை. எனக்கு 9 வயது இருக்கும் போது, எனது அக்கா கரீஷ்மாவின் படப்பிடிப்புகளுக்கு செல்வேன். அவர் ஒத்திகையில் ஈடுபடுவதை பார்த்து அதே போல் செய்து காட்டுவேன். அப்போது எனக்கும் நடிகையாக வேண்டும் என்ற வேகம் பிறந்தது. நான் பட்டப்படிப்பெல்லாம் படிக்கவில்லை. நடிப்பு ஒன்று தான் எனக்கு வெறியாக இருந்தது. எப்போதும் சினிமாவில் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. வருங்கால கணவருக்கு ஒங்க ஆசை தெரியுமா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum