திருவெம்பாவை - 4
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை - 4
ஒன்நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம்
அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே
காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேதவிழுப் பொருளை
கண்ணுக்கு இனியானைப் பாடிக்கசிந்து உள்ளம்
எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய்
பொருள்......
ஒளியையுடைய
முத்துப்போன்ற பற்களை உடையவளே இன்றும் உனக்கு பொழுது விடியவில்லையா?
அழகிய கிளி போன்ற மொழி பேசும் நம் தோழியர் அனைவரும் வந்து விட்டார்களா?
இயைவனை பாடி வந்தவர்களை கணக்கிட்டு சொல்கிறோம்.
அதுவரை
நீ தூங்கி காலம் தாழ்த்தாதே? தேவர்களுக்கு எல்லாம் தலைவன் சாவாமைக்கு
காரணமாக இருக்கும் அமுதம் போன்றவன் அவன். வேதங்களின் சிறந்த பொருளாகவும்,
கண்ணுக்கு இனிய காட்சியும் தரும் சிவனை மனம் கனிந்து உருகிப்பாடுகிறோம்.
ஆதலால் நாங்கள் எண்ணி சொல்ல மாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப்பார்த்து
எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய் தூங்குவாயாக.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum