தேசிய விருதுக்கு நோட்டமிடும் 'மச்சான்'!
Page 1 of 1
தேசிய விருதுக்கு நோட்டமிடும் 'மச்சான்'!
காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வரும் கருணாஸ், தேசிய விருது மீது தனக்கு அதிக ஆசை இருக்கிறது. எப்படியாவது ஒரு தேசிய விருதையாவது நான் கண்டிப்பாக வாங்கி விடுவேன் என்று கூறியிருக்கிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கும் 'மச்சான்' படத்தில் கதையின் நாயகனாக கருணாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'அரசாங்கம்', 'எங்கள் ஆசான்' போன்ற படங்களில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த ஷெரில் பிரிண்டோ நடிக்கிறார். இவர்களுடன் ரமேஷ் அரவிந்த், விவேக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, இயக்குநர் ஷக்தி சிதம்பரமும் இப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.கே.ஸ்டுடியோஸ் சார்பாக குமரகுருபரன், வி.மணி ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, விதார்த், நந்தா, இயக்குநர்கள் பேரரசு, ராசு மதுரவன், சுந்தர்.சி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா, 'பட்டியல்' சேகர், உள்ளிட்ட ஏராளமான திரை பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய கருணாஸ், "ஷக்தி சிதம்பரம் சார் படத்தில் ஏகப்பட்ட காமெடி காட்சிகள் இருக்கும். அவரு எப்போதும் வடிவேலு சாரை வச்சி எடுத்துக்கிட்டு இருப்பாரு. அப்போது ஒரு நாள் நான் அவரைப் பார்த்து ஏன், சார் எனக்கெல்லம் ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டீங்களா. என்று கேட்டேன். அதன் பிறகு தான் அவர் 'ராஜாதி ராஜா' படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதுபோலதான் இந்த படத்தின் வாய்ப்பையும் நான் கேட்டு வாங்கினேன். எனக்கு தேசிய விருது மீது ரொம்ப ஆசை. எப்படியாவது மத்திய அரசிடம் இருந்து ஒரு விருதை வாங்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் காமெடி நடிகர்களால் தேசிய விருது வாங்க முடியாது. ஏன், என்றால் தேசிய விருது கேட்டகரியில் காமெடி நடிகர்கள் இல்லை. இப்போது வரும் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் போன்றவற்றிற்கெல்லாம் தேசிய விருது கொடுக்கும் போது, மக்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு தேசிய விருது ஏன் கொடுக்கப்படுவதில்லை என்று தெரியவில்லை. என்னதான் நடிச்சாலும் காமெடி நடிகனாக தேசிய விருது வாங்க முடியாது என்பதால், நான் எனது ரூட்டை மாற்றினேன். கதையின் நாயகனாக நடித்து அதில் வெற்றியும் பெற்றேன். தற்போது 'மச்சான்' படத்துடன் சேர்த்து நான்கு படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். இன்னும் மூன்று படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. இதுபோல பத்து படங்களில் கதையின் நாயகனாக நடித்துவிட்டால் போதும் நானும் ஒரு ஹீரோவாக தமிழ் சினிமாவில் நின்று விடுவேன். ரஜினி சார் வில்லனாக நடித்து ஹீரோவாக ஜெயித்தார். அவரைத் தொடர்ந்து சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் வில்லனாக நடித்து இன்று ஹீரோவாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதுபோல நான் காமெடியனாக நடித்து ஹீரோவாக வெற்றி பெறுவேன்." என்றார். அதுக்கென்ன மச்சான்.. வாங்கிட்டா போச்சு!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 59-வது தேசிய விருதுக்கு தேர்வான வித்யா பாலன், அப்புக்குட்டி
» ஆரோகணம் படத்தை தேசிய விருதுக்கு அனுப்புவோம்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்
» மச்சான்ஸ் இல்லாத 'மச்சான்'!
» போன மச்சான் திரும்பி வந்தாராம்?!
» விவேக் கதாநாயகனாக நடிக்கும் மச்சான்
» ஆரோகணம் படத்தை தேசிய விருதுக்கு அனுப்புவோம்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்
» மச்சான்ஸ் இல்லாத 'மச்சான்'!
» போன மச்சான் திரும்பி வந்தாராம்?!
» விவேக் கதாநாயகனாக நடிக்கும் மச்சான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum