டோணி, கோஹ்லி அபார சதம்! 400 ரன்களைக் கடந்தது இந்திய அணி!
Page 1 of 1
டோணி, கோஹ்லி அபார சதம்! 400 ரன்களைக் கடந்தது இந்திய அணி!
சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று விராத் கோஹ்லி, கேப்டன் டோணி ஆகியோர் சதமடித்து அபாரமாக விளையாடினர். இந்திய அணி 400 ரன்களைக் கடந்தது. இன்றைய ரன்குவிப்பின் மூலம் டோணி டெஸ்ட் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.
சென்னையில் ஆஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 380 ரன்களைக் குவித்தது. பின்னர் இந்திய அணி நேற்று தமது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சேவாக்கும் முரளி விஜய்யும் 12 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
ஆனால் களத்தில் இருந்த புஜாராவுடன் கை கோர்த்த டெண்டுல்கர் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தார். புஜாரா 44 ரன்களில் அவுட் ஆனார். அவருக்குப் பின்னர் வந்த கோஹ்லியும் டெண்டுல்கருடன் இணைந்து நிதானமாக விளையாடினர்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் டெண்டுல்கர் 71 ரன்களுடன் கோஹ்லி 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-ம் நாள் ஆட்டத்தை டெண்டுல்கரும் கோஹ்லியும் விளையாடத் தொடங்கினர். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் முதல் டெஸ்ட் இது.
இன்னமும் தாம் பார்மில் இருப்பதாகவே சச்சின் நிரூபித்திருக்கிறார். தம் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.. ஆனால் 81-வது ரன்களை எடுத்திருந்த சச்சின் ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
இந்தப் போட்டியில் அவுட் ஆனதால் சச்சின் தமது 52-வது சதத்தை இழந்தார். பின்னர் களத்தில் இருந்த கோஹ்லியுடன் கேப்டன் டோணி இணைந்து அபாரமாக விளையாடினர். கோஹ்லி அபாரமாக விளையாடி முதலில் சதமடித்தார். அவர் 107 ரன்களைக் குவித்தார். கோஹ்லி அவுட் ஆகும் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த டோணியுடன் ஜடேஜா இணைந்தார்.
ஆனால் ஜடேஜா நீண்ட நேரம் நிற்கவில்லை. ஜடேஜா 16 ரன்களைத்தான் எடுத்திருந்தார். அதன் பிறகு களத்துக்கு வந்த அஸ்வின் பேட்டிங்கில் சொதப்பிவிட்டார். பந்து வீசி 7 விக்கெட் எடுத்து அபாரத்தை வெளிப்படுத்திய அஸ்வின் 6 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களைத்தான் எடுத்தார்.
பின்னர் டோணியுடன் ஹர்பஜன்சிங் கை கோர்த்தார். கோஹ்லியைப் போலவே டோணியும் சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் 4வது சதம். இதன் மூலம் டோணி மீதான விமர்சனங்களுக்கு அவர் முற்றுப் புள்ளி வைத்தார். மேலும் இந்திய அணி 400 ரன்களைத் தாண்டியிருக்கிறது. மேலும் இன்றைய போட்டியில் ரன்களைக் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் டோணி 4 ஆயிரம் ரன்களை எடுத்தும் சாதனையும் படைத்திருக்கிறார்.
சென்னையில் ஆஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 380 ரன்களைக் குவித்தது. பின்னர் இந்திய அணி நேற்று தமது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சேவாக்கும் முரளி விஜய்யும் 12 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
ஆனால் களத்தில் இருந்த புஜாராவுடன் கை கோர்த்த டெண்டுல்கர் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தார். புஜாரா 44 ரன்களில் அவுட் ஆனார். அவருக்குப் பின்னர் வந்த கோஹ்லியும் டெண்டுல்கருடன் இணைந்து நிதானமாக விளையாடினர்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் டெண்டுல்கர் 71 ரன்களுடன் கோஹ்லி 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-ம் நாள் ஆட்டத்தை டெண்டுல்கரும் கோஹ்லியும் விளையாடத் தொடங்கினர். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் முதல் டெஸ்ட் இது.
இன்னமும் தாம் பார்மில் இருப்பதாகவே சச்சின் நிரூபித்திருக்கிறார். தம் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.. ஆனால் 81-வது ரன்களை எடுத்திருந்த சச்சின் ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
இந்தப் போட்டியில் அவுட் ஆனதால் சச்சின் தமது 52-வது சதத்தை இழந்தார். பின்னர் களத்தில் இருந்த கோஹ்லியுடன் கேப்டன் டோணி இணைந்து அபாரமாக விளையாடினர். கோஹ்லி அபாரமாக விளையாடி முதலில் சதமடித்தார். அவர் 107 ரன்களைக் குவித்தார். கோஹ்லி அவுட் ஆகும் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த டோணியுடன் ஜடேஜா இணைந்தார்.
ஆனால் ஜடேஜா நீண்ட நேரம் நிற்கவில்லை. ஜடேஜா 16 ரன்களைத்தான் எடுத்திருந்தார். அதன் பிறகு களத்துக்கு வந்த அஸ்வின் பேட்டிங்கில் சொதப்பிவிட்டார். பந்து வீசி 7 விக்கெட் எடுத்து அபாரத்தை வெளிப்படுத்திய அஸ்வின் 6 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களைத்தான் எடுத்தார்.
பின்னர் டோணியுடன் ஹர்பஜன்சிங் கை கோர்த்தார். கோஹ்லியைப் போலவே டோணியும் சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் 4வது சதம். இதன் மூலம் டோணி மீதான விமர்சனங்களுக்கு அவர் முற்றுப் புள்ளி வைத்தார். மேலும் இந்திய அணி 400 ரன்களைத் தாண்டியிருக்கிறது. மேலும் இன்றைய போட்டியில் ரன்களைக் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் டோணி 4 ஆயிரம் ரன்களை எடுத்தும் சாதனையும் படைத்திருக்கிறார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டோணியின் அபார இரட்டைச் சதம்
» இந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி: விராத் கோலி 133 ஓட்டங்கள்
» பிரேசில் அழகியிடம் ‘அவுட்’ ஆன விராத் கோஹ்லி! (படங்கள்)
» சாதனை வீரர் கோஹ்லி: அதிரடி நாயகனாக உருவெடுப்பு
» சாதனை வீரர் கோஹ்லி: அதிரடி நாயகனாக உருவெடுப்பு
» இந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி: விராத் கோலி 133 ஓட்டங்கள்
» பிரேசில் அழகியிடம் ‘அவுட்’ ஆன விராத் கோஹ்லி! (படங்கள்)
» சாதனை வீரர் கோஹ்லி: அதிரடி நாயகனாக உருவெடுப்பு
» சாதனை வீரர் கோஹ்லி: அதிரடி நாயகனாக உருவெடுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum