தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதையை மையப்படுத்தித்தான் கதாநாயகன் மார்க்கெட் உயரும்: இயக்குனர் விக்ரமன்

Go down

கதையை மையப்படுத்தித்தான் கதாநாயகன் மார்க்கெட் உயரும்: இயக்குனர் விக்ரமன் Empty கதையை மையப்படுத்தித்தான் கதாநாயகன் மார்க்கெட் உயரும்: இயக்குனர் விக்ரமன்

Post  ishwarya Sat Mar 16, 2013 4:04 pm

அடிதடி, வெட்டுக்குத்து, கவர்ச்சியான நடிகைகள், இரட்டை அர்த்த வசனம், உறவுகளை கொச்சைப்படுத்தும் காட்சிகள் எதுவும் வெற்றிப்படத்துக்கான அடையாளங்கள் இல்லை. தரமான படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று ‘புதுவசந்தம்’ படம் மூலம் தனது அத்தியாத்தை ஆரம்பித்துக் கொண்ட இயக்குனர் விக்ரமன் இன்றுவரை தனது பாதையை மாற்றிக் கொள்ளவில்லை. தனது மென்மையான கதைக்களத்துடன் தற்போது ‘நினைத்தது யாரோ’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து விக்ரமன் கூறும்போது, என்னுடைய படங்களில் சென்டிமென்ட், காதல், கதை, காமெடி, இசை என எல்லாம் இருக்கும். அதேபோல், இந்த படத்திலும் இருக்கும் என்று சொல்லலாம்... இல்லையென்றும் சொல்லலாம். ‘நினைத்தது யாரோ’ முழுக்க முழுக்க காதல்கதை. பேமிலி சென்டிமென்ட் சுத்தமாக கிடையாது. ஆனால் பேமிலி ஆடியன்ஸ் அனைவரையும் தியேட்டருக்கு இழுத்து வரும் வலிமையான கதையம்சம் கொண்டது.

இந்த கதை நட்சத்திரங்களுக்கு பொருந்தாது. புதுமுகங்கள்தான் பொருந்துவார்கள். அதனால்தான் புதுமுகங்களை தேர்ந்தெடுத்தேன். நட்சத்திர நடிகராக இருக்கட்டும், புதுமுகங்களாக இருக்கட்டும் அவர்களுக்கான மார்க்கெட் உயர கதைதான் காரணமாக இருக்கும்.

மாஸ் ஹீரோ என்பது முதல் இரண்டு ஷோவுக்கான காரணகர்த்தாவாக இருக்கும். எவ்வளவு பெரிய ஹீரோ என்றாலும் கதை இல்லையென்றால் மக்கள் வீசி எறிந்து ஒதுக்கி விடுவார்கள். ஆனால், ஹீரோக்கள் தங்களுக்காகத்தான் படம் ஓடுகிறது என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோயிசம் இல்லாத சிறப்பான கதைகள்கூட ஆக்ஷன் ஹீரோக்களின் மார்க்கெட் உயர காரணமாகி இருக்கிறது. இதை ஹீரோக்கள் உணரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum