தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர் இன்று ஹீரோ: கே.பாலச்சந்தர் நெகிழ்ச்சி

Go down

என் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர் இன்று ஹீரோ: கே.பாலச்சந்தர் நெகிழ்ச்சி Empty என் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர் இன்று ஹீரோ: கே.பாலச்சந்தர் நெகிழ்ச்சி

Post  ishwarya Sat Mar 16, 2013 4:03 pm


ஐ ட்ரீம்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பில் அரிமா பி.எஸ்.கருணாநிதி தயாரித்து வரும் படம் ‘கல்லாப்பெட்டி’. இந்தப்படத்தில் ஹீரோவாக அஸ்வின் பாலாஜியும், ஹீரோயினாக ரோஸின் ஜாலியும் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரா ரா இயக்குகிறார்.

இந்தப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று மாலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது:

எனக்கு உடல்நிலை சரியில்லை, வரும்போதுகூட டாக்டரை பார்த்து விட்டுத்தான் இந்த விழாவுக்கு வருகிறேன். அதற்கு காரணமும் இருக்கிறது. சமீபகாலமாக சினிமாவில் திறமைசாலியான புதுமுகங்கள் அதிகமாக வந்து வெற்றி பெறுகிறார்கள். திறமையான பல புதிய டைரக்டர்களும் சினிமாவுக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு முதல் படத்திலேயே ரசிகர்களின் ஆதரவும், வெற்றியும் கிடைக்கிறது. இதைப்பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

ஏனென்றால் என் காலத்திலெல்லாம் புதியவர்களுக்கு அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. நானெல்லாம் அடுத்தடுத்து படங்களை டைரக்ட் பண்ணித்தான் என்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. திறமைசாலிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதல் படத்திலேயே பாராட்டும், தகுந்த அங்கீகாரமும் கிடைத்து விடுகிறது, இது வரவேற்கக்கூடிய நல்ல விஷயம்.

இந்தப்படத்திலும் புதியவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். அதிலும் இந்த படத்தில் நாயகனான அஸ்வின் என் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர். அவர் இன்று ஹீரோவாக ஒரு படத்தில் நடித்திருப்பதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது.

நான் வீட்டிற்கு போகும் பொதெல்லாம் அவரை கவனிப்பேன், அப்போது எதையாவது ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருப்பார், அதை நான் வாங்கிப் பார்ப்பேன். அதில் கவிதைகளை எழுதி வைத்திருப்பார். அந்தளவுக்கு அவருக்குள்ளும் திறமை இருக்கிறது. அதன்பிறகு அவர் என் வீட்டில் வேலை பார்க்கவில்லை. என் வீட்டைவிட பெரிய இடத்துக்கு அதாவது நடிகர் கமல் வீட்டுக்கு செக்யூரிட்டியாக வேலை பார்க்கப் போய்விட்டார்.

இன்னும் ஒரு நாலு வருஷம் போயிருந்தால் நானே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கியிருப்பேன். ஆனால் விஷயம் அது இல்லை. திறமை எங்கிருந்தாலும், யாரிடம் இருந்தாலும் அது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இவருக்காகவும், இந்த புதியவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகவும்தான் என் உடல்நிலையையும் பொருட்படுத்தால் இந்த விழாவுக்கு வந்தேன். இந்தப்படத்தின் வெற்றி விழாவில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறி விழாவுக்கு வந்திருந்த எல்லோரையும் நெகிழ வைத்தார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.

விழாவில் இயக்குனர்கள் பிரபுசாலமன், எஸ்.எழில் உட்பட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
» ‘விமான நிலையத்தில் என் ரசிகர்களை நடந்தே போய் பார்க்க ஆசைப்படுகிறேன்!’ – ரஜினி நெகிழ்ச்சி
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
»  காமெடியால் கிடைத்த வாய்ப்பு : க.ல.தி.ஆ. இயக்குனர் நெகிழ்ச்சி
» பிரகாஷ்ராஜூக்கு பாலச்சந்தர் அறிவுரை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum