தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டைரக்டர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பேட்டி: கோவை கல்லூரி மாணவியை சிறுவாணி கதாநாயகியாக்க ஆசைப்பட்டேன்

Go down

டைரக்டர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பேட்டி: கோவை கல்லூரி மாணவியை சிறுவாணி கதாநாயகியாக்க ஆசைப்பட்டேன் Empty டைரக்டர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பேட்டி: கோவை கல்லூரி மாணவியை சிறுவாணி கதாநாயகியாக்க ஆசைப்பட்டேன்

Post  ishwarya Sat Mar 16, 2013 1:35 pm


கோவை அ.தி.மு.க. பிரமுகரான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் “சிறுவாணி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார். அவரது இசையில் 5 பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக கோவையில் உள்ள ஊர் பெயர்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள குத்துப்பாட்டு என்ற பாடல் கோவை இளைஞர்களை மிகவும் கவரும்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தயாரிப்பாளரும் இயக்குனருமான ரேஸ் கோர்ஸ் ரகுநாத், இசையமைப்பாளர் தேவா, நடிகர் சஞ்சய் நடிகை ஐஸ்வர்யா, நடிகை பாபிலோனா மற்றும் நடிகர்-நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் கூறியதாவது:- “சிறுவாணி” படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிந்து திரையீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தை எடுக்க தொடங்கியபோது கோவையை சேர்ந்த ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

கோவையை மையமாக வைத்து படத்தை எடுத்ததால் நான் அந்த முடிவுக்கு வந்தேன். படத்தின் கதைப்படி கோவையில் கல்லூரி மாணவி ஒருவரை தேர்வு செய்து நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கினேன்.

இதற்காக கல்லூரி மாணவிகள் கூடும், பஸ்சுக்காக காத்து நிற்கும் இடங்களில் எல்லாம் நாயகியை தேடி அலைந்தேன். போட்டோ ஷூட்டுக்காக ஒரு கேமரா மேனுடன் கோவையை வலம் வந்தேன். ஒரு சில இடங்களில் நல்ல முக அழகுள்ள மாணவிகளை படம் எடுத்தபோது சந்திக்க நேரிட்டது.

இத்தனை நிகழ்வுகளுக்கு பிறகும் கதைக்கு ஏற்றார்போல் நாயகி கோவையில் சிக்க வில்லை. அதன் பின்னர் கொல்கத்தாவை சேர்ந்த ஐஸ்வர்யாதான் படத்தின் கதாநாயகியாக தேர்வானார். இவையெல்லாம் முடிந்து படம் தயாராகிக் கொண்டு இருந்தபோது கோவையை சேர்ந்த பல இளம்பெண்கள், மாணவிகள் நாயகி வாய்ப்பை கேட்டனர்.

படம் தயாராக தொடங்கிய பின்னர் அவர்களை எப்படி நடிக்க வைக்க முடியும்? எனவே நான் மறுத்து விட்டேன். ஆனால் நாம் எடுக்கும் படத்தில் கோவையை சேர்ந்த பெண் நாயகியாக நடிக்க வில்லையே என்ற வருத்தம் இன்றும் என் மனதில் உள்ளது.

இவ்வாறு “சிறுவாணி” பட இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைரக்டர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பேட்டி: கோவை கல்லூரி மாணவியை சிறுவாணி கதாநாயகியாக்க ஆசைப்பட்டேன்
» கோவை அ.தி.மு.க பிரமுகர் தயாரிப்பில் சிறுவாணி: முத்த காட்சியில் 30 டேக் வாங்கிய நடிகை
» கிரிக்கெட் வீரர் ஆக ஆசைப்பட்டேன்! விஷ்ணு பேட்டி!!
» களவாணி பட கதாநாயகன் நடிகர் விமல் ரகசிய திருமணம்: மருத்துவ கல்லூரி மாணவியை மணந்தார்
» டைரக்டர் விஜய்யுடன் காதலா?அமலாபால் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum