தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படஅதிபர்கள் கூட்டத்தில் அடிதடி-கைகலப்பு : இருதரப்பினரும் போலீசில் புகார்

Go down

படஅதிபர்கள் கூட்டத்தில் அடிதடி-கைகலப்பு : இருதரப்பினரும் போலீசில் புகார் Empty படஅதிபர்கள் கூட்டத்தில் அடிதடி-கைகலப்பு : இருதரப்பினரும் போலீசில் புகார்

Post  ishwarya Sat Mar 16, 2013 1:00 pm


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக பிளவுபட்டு இருக்கிறது. எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய சென்னை சங்கங்களின் பதிவாளர் விடுத்துள்ள ஒரு அறிவிப்பு தொடர்பாக, பிலிம்சேம்பர் வளாகத்தில் நேற்று மாலை கேயார் பேட்டி அளித்தார். அவருடைய அணியை சேர்ந்த பட அதிபர்கள் அனைவரும் உடன் இருந்தார்கள். நிருபர்களிடம் கேயார் கூறியதாவது:-

எஸ்.ஏ.சந்திரசேகரன், தாணு, பி.எல்.தேனப்பன் மற்றும் சில உறுப்பினர்களிடம் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்பதற்காக, பல தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து கடந்த 10 மாதங்களாக போராடி வந்தனர்.

கடந்த 28.10.2012 அன்று நீதிபதி பத்மநாபன் முன்னிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகக் குழு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

2.2.2013 அன்று நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் அந்த ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 204 ஓட்டுகளும், எதிராக 10 ஓட்டுகளும் பதிவாகியிருந்தன. நீதிபதி தீர்ப்பின் நகல்கள் சென்னை மத்திய பதிவாளர்கள் அலுவலக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

30.1.2013 அன்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகக்குழு பதவியில் இருக்க தகுதியிழந்து விட்டார்கள் என்று சென்னை மத்திய பதிவு துறையின் மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு, அதை பதிவு தபாலில் அனுப்பி வைத்தார். எனவே இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நீதிமன்றம் மூலம் ஒரு ரிசீவரை பெற்று, அடுத்த இரண்டு மாதத்தில் சங்கத்துக்கு தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுப்பதுதான் அடுத்த கட்ட நடவடிக்கை.

தேர்தலில் கேயார் எந்த பதவிக்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடப் போவதாக எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியிருக்கிறார். எங்களுக்கு பதவி முக்கியமல்ல. தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுதான் முக்கியம். தேர்தலில், எஸ்.ஏ.சந்திரசேகரனை எதிர்த்து போட்டியிட்டு நான் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு கேயார் கூறினார்.

கேயார் பேட்டி அளித்து முடித்தபோது, எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியை சேர்ந்த பாபுகணேஷ், பாஸ்கர், ரிஷிராஜ், ராஜசிம்மன் உள்பட சிலர் அங்கு வந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்க முயன்றார்கள். அதற்கு கேயார் அணியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அடிதடி-கைகலப்பு நடந்தது. இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்ய இருக்கிறோம் என்று கேயார் தெரிவித்தார்.

பாபுகணேஷ் நிருபர்களிடம் கூறும்போது, எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர், சங்கத்தில் உறுப்பினரே அல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆயிரம்விளக்கு போலீசில் புகார் செய்து இருக்கிறோம் என்றார்.

இதற்கிடையில், வருகிற 24-ந்தேதி, சென்னை தியாகராயநகரில் உள்ள தேவர் மண்டபத்தில் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவை கூட்டப்போவதாக எஸ்.ஏ.சந்திரசேகரன் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum