நான் தலைக்கனம் பிடித்த நடிகை அல்ல: சமந்தா
Page 1 of 1
நான் தலைக்கனம் பிடித்த நடிகை அல்ல: சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் சமந்தா. படங்கள் ஹிட்டானதால் இயக்குனர்களையும் சக நடிகர்களையும் இவர் மதிப்பதில்லை என்று கிசுகிசுக்கள் பரவி உள்ளன.
இதற்கு பதில் அளித்து சமந்தா கூறியதாவது:-
எனக்கு தலைக்கனம் எப்போதும் வந்தது இல்லை. வீட்டில் சாதாரண பெண்ணாகத்தான் இருக்கிறேன். சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் நான் என்னவாக இருப்பேன் என்று எனக்கு தெரியும். தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு அதிர்ஷ்டமே காரணம் என்று எனக்கு தெரியும்.
என்னை விட அழகான திறமையான பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்காத கவுரவம் எனக்கு கிடைத்து இருக்கிறது. அதற்காக நான் கர்வப்பட்டது இல்லை. என் வீட்டில் பெரிய நடிகைக்கான எந்த அடையாளமும் இருக்காது. சாதாரண வீட்டைப் போல்தான் இருக்கும். படப்பிடிப்பு இல்லாதபோது நானே சமைப்பேன்.
பெரிய நடிகையான போதும் சாதாரண பெண்ணைப் போலவே கடைகளுக்கு போய் காப்பி சாப்பிடுகிறேன். பெரிய ஆசைகள் எனக்கு கிடையாது. கனவு உலகத்தில் சஞ்சரிக்கவும் மாட்டேன். எப்போதும் எளிமையாகவே இருக்கிறேன்.
இவ்வாறு சமந்தா கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை சமந்தா நடிக்கும் 'நான் ஈ'
» நான் ஒரு நடிகை; அரசியல்வாதி அல்ல: அசின் ஆக்ரோஷம்
» இப்போதுள்ள நடிகைகளில் யாரும் நம்பர்-1 கதாநாயகி அல்ல: சமந்தா
» வாய்ப்புக்காக அலைபவள் அல்ல நான்! – பூனம் பாஜ்வா
» நான் நடிகன்; அரசியல்வாதி அல்ல: அருள்நிதி!
» நான் ஒரு நடிகை; அரசியல்வாதி அல்ல: அசின் ஆக்ரோஷம்
» இப்போதுள்ள நடிகைகளில் யாரும் நம்பர்-1 கதாநாயகி அல்ல: சமந்தா
» வாய்ப்புக்காக அலைபவள் அல்ல நான்! – பூனம் பாஜ்வா
» நான் நடிகன்; அரசியல்வாதி அல்ல: அருள்நிதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum