தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூஜா காந்தி திருமணம் நின்றது ஏன்?

Go down

பூஜா காந்தி திருமணம் நின்றது ஏன்?  Empty பூஜா காந்தி திருமணம் நின்றது ஏன்?

Post  ishwarya Thu Mar 14, 2013 2:53 pm

நடிகை பூஜா காந்தியின் நிச்சயதார்த்தம் நவம்பர் 15ல் நடைபெற்றது. டிசம்பர் 15ல் அவர் திருமணத்தை நிறுத்துவதற்காக முடிவெடுத்து அறிவித்துள்ளார். இது சினிமா, அரசியல், ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னடத்தில் பிரபலமாகி வரும் நடிகை பூஜா காந்தி. முங்காரு மழை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ், வங்காள படங்களிலும் நடித்தார். அரசியலில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அவர் சமீபத்தில் நடித்து வெளி வந்த படமான தண்டுபாளையாவில் வித்தியாசமாக ரவுடி பெண் வேடத்தில் தோன்றி அசத்தினார். அப்படத்தை பார்த்த ஆனந்த் கவுடாவும் சினிமா தயாரிக்க முடிவெடுத்தார். இதனால் பூஜா காந்தியை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனந்த் கவுடாவுக்கு வீட்டில் பெண் பார்த்து வந்தனர். அவர் வீட்டில் காதலை சொன்னார். வீட்டில் உள்ளவர்களுக்கு பூஜாவை பிடித்துப் போனது.

இதனால் திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் விமர்சையாக கடந்த நவம்பர் 15ம் தேதி நடைபெற்றது. பூஜாவின் கையில் 3 படங்கள் உள்ளன. அவற்றை முடித்து கொடுத்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவானது. நிச்சயதார்த்தத்துக்கு பின்னர் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்த பூஜா காந்தி ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார்.
அவரை ஆனந்த் கவுடா தொடர்பு கொண்ட போதெல்லாம் ‘பிசியாக’ உள்ளார் என்று பதில் கிடைத்தது.

இதற்கிடையே பூஜா நடித்துவரும் புதிய படத்தை விநியோகிக்கும் உரிமையை பெறுவதற்கு ஆனந்த் முயற்சி செய்துள்ளார். அதற்கு பூஜா ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஒருநாள் இரவில் போனில் பூஜா காந்தியிடம் தனது பாரத்தை கொட்டிய ஆனந்த், பூஜாவின் பெற்றோர், சகோதரிகளை சரமாரியாக விமர்சித்துள்ளார். இதனால் கோபம் கொண்ட பூஜா காந்தி ஆனந்திடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதற்கிடையே, மஜத கட்சியிலிருந்து விலகிய பூஜா காந்தி எடியூரப்பாவின் கட்சியான கர்நாடக ஜனதாகட்சியில் சேர்ந்தார். அக்கட்சி கூட்டங்களில் பங்கேற்றார். இதனால் மஜத சார்பில் எம்எல்ஏவாக போட்டியிட டிக்கெட் எதிர்பார்த்திருந்த ஆனந்த் கவுடாவுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. பூஜா காந்திக்கும் எனக்கும் இனி எந்த உறவும் இல்லை, நான் அவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று ஆனந்த் தெரிவித்துள்ளார். பூஜா தரப்பும் இம்முடிவை ஏற்று கொண்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum