தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று காலகட்டங்களில் உருவாகும் படம்

Go down

மூன்று காலகட்டங்களில் உருவாகும் படம்  Empty மூன்று காலகட்டங்களில் உருவாகும் படம்

Post  ishwarya Tue Mar 12, 2013 5:24 pm

மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகிறது ‘சங்கராபுரம். ஹரிகுமார், சான்யாதாரா ஹீரோயினாக நடிக்கும் இப் படத்தை பி.வி.நம்பி ராஜன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: தந்தை மகன் உறவு, கணவன் மனைவி புரிதல், அண்ணன் தங்கை பாசம் என 1968, 1988, 2013 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் கதையாக இது உருவாகிறது. தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார் ஹீரோ. இதுவரை முரட்டுத்தனமான பாத்திரங்களில் நடித்துவந்த ஹரிகுமார் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இதற்கு முன் மதுரை சம்பவம் என்ற படத்தில் அனுயா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு லிப் டு லிப் கிஸ் கொடுப்பதுபோல் ஹரிகுமார் நடித்திருந்தார். அதுபோல், ‘இப்படத்திலும் முத்தக்காட்சி இருக்கிறதா?‘ என்கிறார்கள். வலுக்கட்டாயமாக முத்தக்காட்சியை வைக்க விரும்பவில்லை. ‘சங்கராபுரம் என்றதும் எந்த ஊரை பற்றிய கதை?‘ என்கிறார்கள். இதேபெயரில் தமிழ்நாட்டில் 5 ஊர்கள் இருக்கிறது. எனவே குறிப்பிட்ட ஊரைபற்றிய படம் அல்ல. சபேஷ் முரளி இசை. நவநீத கண்ணன் ஒளிப்பதிவு. ஜி.ஆர்.விஜய் சுகுமாரன் தயாரிப்பு. இதன் ஷூட்டிங் முடிந்தது. ஏப்ரல் ரிலீஸ். இவ்வாறு இயக்குனர் நம்பிராஜன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum