தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் நடிக்க வந்தது ஏன்? கோபிகா பதில்

Go down

மீண்டும் நடிக்க வந்தது ஏன்? கோபிகா பதில்  Empty மீண்டும் நடிக்க வந்தது ஏன்? கோபிகா பதில்

Post  ishwarya Tue Mar 12, 2013 12:33 pm







‘மீண்டும் நடிக்க வந்தது ஏன்? என்பதற்கு பதில் கூறினார் கோபிகா. ‘ஆட்டோகிராப், ‘எம் மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கோபிகா. இவர் ஆஸ்திரேலியா தொழில் அதிபர் அஜ்லெஸ் என்பவரை மணந்தார். பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்டு கணவருடன் வெளிநாட்டிலேயே தங்கினார். இந்நிலையில் அவர் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சமீபத்தில் வந்தார். அப்போது மலையாள படத்தில் நடிக்க வந்த அழைப்பை ஏற்று நடித்தார். இது பற்றி அவர் கூறும்போது, ‘ஊருக்கு புறப்பட தயாராகிக்கொண்டிருந்த என்னை தயாரிப்பாளர் ஜோசப் சந்தித்தார். அப்போது தான் தயாரிக்கும் படம் பற்றி கூறினார்.

எனது கணவரிடமும் பேசினார். அவரது அணுகுமுறையை ஏற்று என்னை மீண்டும் நடிக்க அனுமதித்தார் என் கணவர். ‘பார்யா அதரா போரா‘ என்ற அப்படத்தில் ஜெயராம் ஹீரோ. மேலும் எனது சொந்த ஊரான திருச்சூர் அருகிலேயே ஷூட்டிங் நடந்தது. அதனால் ஷூட்டிங் முடித்துவிட்டு எனது குழந்தையை கவனித்துக்கொள்ளவும் போதுமான நேரம் இருந்தது. துணிச்சலான பெண் வேடம். எனக்கு ரொம்பவும் பிடித்திருந்ததால் நடித்தேன். நடிக்காமல் இருந்த நேரத்திலும் எனது தோழிகள் மஞ்சுவாரியர், சம்யுக்தா, பாவனா, ரம்யா ஆகியோருடன் எப்போதும் தொடர்பில் இருப்பேன். நேரமும்,கேரக்டரும் பொருந்தி வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum