தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டி 20' உலகக் கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கவுள்ளன

Go down

டி 20' உலகக் கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கவுள்ளன Empty டி 20' உலகக் கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கவுள்ளன

Post  meenu Mon Mar 11, 2013 12:54 pm

இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டங்களுக்கான உலகக் கோப்பை போட்டிகள் நாளை செவ்வாய்கிழமை இலங்கையில் தொடங்குகின்றன.

ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டிகள் ஒரே காலப் பகுதியில் நடைபெறுகின்றன. ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 8 அணிகளும் பங்குபெறுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்

விளையாட்டு

ஆடவர் பிரில் இந்த 12 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

ஆஸ்திரேலியா, அயர்லாந்து,மேற்கிந்தியத் தீவுகள் ‘பி’ பிரிவில் உள்ளன. ‘சி’ யில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் இடம்பெறுகின்றன.

கடைசிப் பிரிவான ‘டி’ யில் வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஹம்பாந்தோட்டை விளையாட்டு அரங்கம்

ஆடவர் கிரிக்கெட்டில் பங்குபெறும் நாடுகளில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைத் தவிர இதர நாடுகள் மகளிர் பிரிவில் பங்குபெறுகின்றன.

ஆடவர் பிரிவில் நாளை நடைபெறவுள்ள முதல் ஆட்டம் ஹம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு அரங்கில் உள்ளூர் நேரம் மாலை ஏழரை மணிக்கு நடைபெறவுள்ளது.

முதல் போட்டியில் இலங்கை அணி ஜிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடுகிறது.
பல நகரங்களில் போட்டி

கண்டி கிரிக்கெட் மைதான்ம்

இந்த உலகக் கோப்பை போட்டிகள் ஹம்பாந்தோட்டையைத் தவிர தலைநகர் கொழும்பிலுள்ள பிரேமதாஸ் விளையாட்டு அரங்கம், காலியிலுள்ள சர்வதேச விளையாட்டு அரங்கம் மற்றும் கண்டி பல்லேக்கலேயிலுள்ள முத்தையா முரளிதரன் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிலும் நடைபெறுகின்றன.

மகளிருக்கான ஆரம்பகட்ட போட்டிகள் அனைத்தும் காலியில் இடம்பெறவுள்ளன.

ஆரம்பகட்ட போட்டிகளைப் பொறுத்தவரை, ஆடவர் பிரிவில் ‘ஏ’ பிரிவில் உள்ள அணிகள் பங்குபெறும் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டையிலும், ‘டி’ பிரிவில் உள்ள அணிகள் பங்குபெறும் போட்டிகள் அனைத்தும் பல்லேகலேயிலும் இடம்பெறுகின்றன.

முதல் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி

இதர இரண்டு பிரிவுப் போட்டிகள் கொழும்பில் நடைபெறும்.

ஆடவர் பிரிவில் முதல்கட்டப் போட்டிகள் இந்த மாதம் 25 ஆம் தேதி வரை நடைபெறும். அதில் தகுதி பெறும் எட்டு அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும்.

மகளிர் பிரிவில் ஆரம்பகட்ட போட்டிகளை அடுத்து நேரடியாக அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.

இரு பிரிவிலுமான இறுதிப் ஆட்டங்கள் அடுத்த மாதம் ஏழாம் தேதி கொழும்பில் நடக்கவுள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum