தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வறட்டு இருமலால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை - என்ன செய்வது?

Go down

வறட்டு இருமலால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை - என்ன செய்வது?  Empty வறட்டு இருமலால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை - என்ன செய்வது?

Post  meenu Mon Mar 04, 2013 11:44 am

வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா? என்னவெல்லாமோ மருந்து சாப்பிட்டு விட்டேன்; ஆங்கில மருத்துவரிடம் சென்று ஊசியும் போட்டாச்சு! அப்படியும் இருமல் குறையவில்லை! என்ன செய்யவென்றே தெரியவில்லை! என்று வருத்தப்படுகிறீர்களா?

கொஞ்சம் சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் (ஒவ்வொன்றும் 30கிராம் அளவில்) எடுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் சின்ன துண்டு சுக்கு, மல்லி, கருப்பட்டி(கருப்புக்கட்டி) அல்லது பனங்கற்கண்டு ஆகியன சேர்த்துக்கொள்ளுங்கள். 200 மி.லி. நீர் சேர்த்து, பாதியாகும் அளவு நன்றாகக் கொதிக்க விடுங்கள். ஆறிய பின்னர் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை குடியுங்கள்! வறட்டு இருமல் திரும்பிப் பார்க்காமல் ஓடி விடும். இரவிலும் இருமல் தொல்லை இல்லாமல் தூங்கலாம்.

அலுவலகத்தில் இருமிக்கொண்டே இருக்கிறேன். பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது என்ன செய்வது? என்று கேட்பவர்கள், கொஞ்சம் காய்ந்த திராட்சையை (உலர் திராட்சை) வாயில் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இந்த உமிழ்நீர் இறங்க, இறங்க, இருமல் வராது.

குறிப்பு: சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் - இவையெல்லாம் எங்கே கிடைக்கும் எனத் தயங்க வேண்டாம். நாட்டு மருந்துக் கடைகள் எல்லாவற்றிலும் இவை கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வறட்டு இருமலால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை - என்ன செய்வது?
»  நிம்மதியா தூங்க என்ன செய்ய வேண்டும்.
»  தீக்காயத்துக்கு என்ன செய்வது?
»  என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» அழுகும் வழைகன்றை என்ன செய்வது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum