தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"உ" படக்குழுவினரை தவிக்கவிட்ட கதாநாயகி!

Go down

"உ" படக்குழுவினரை தவிக்கவிட்ட கதாநாயகி! Empty "உ" படக்குழுவினரை தவிக்கவிட்ட கதாநாயகி!

Post  ishwarya Sat Mar 02, 2013 6:10 pm

தம்பி ராமையா வடிவேலைவிட பெட்டராக நடிப்பார், வடிவேலைவிட குணச்சித்திர வேடத்தில் வெளுத்து வாங்குவார் என்றெல்லாம் ஆஷிக் என்ற இயக்குனர் தம்பி ராமையாவின் பிஆர்ஓ வாக பேசியதை நினைவிருக்கிறதா? இந்த ஆஷிக் இயக்கும் உ என்ற படத்தில் தம்பி ராமையாதான் கதை நாயகன். ஆஷிக் என்ற பூனைக்குட்டி மியாவ் என்று கத்தியதற்கு காரணம் கிடைத்ததா?

கொடைக்கானலில் உ படப்பிடிப்பை நடத்திய போது நாயகி டிமிக்கிக் கொடுத்திருக்கிறார். எப்படி என்பதன் திரைக்கதை விளக்கத்தை அவர்களே தந்திருக்கிறார்கள்.

பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரைப்படக் கல்லுரி மாணவர் ஆஷிக் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் படம் "உ". தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க 25க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது.

இயக்குநர் ஆஷிக் விரும்பிய கதாநாயகி கிடைக்காமல் தாமதப்பட்டு வந்தது இப்படத்தின் படப்பிடிப்பு. இறுதியில் கேரளாவில் இருந்து ஒரு புதுமுக கதாநாயகியை தேர்வு செய்துவிட்டு, படப்பிடிப்பு தேதியையும் உறுதி செய்து விட்டு ஒருநாள் முன்னதாகவே கொடைக்கானல் கிளம்பி சென்றனர் உ படக்குழுவினர்.

மறுநாள் கதாநாயகி வந்த உடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று இருந்த படக்குழுவுக்கு போனில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி. தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் கொடைக்கானல் வரமுடியவில்லை என கூலாக சொன்னார் அந்த புதுமுக கதாநாயகி.

படத்தில் தான் கதாநாயகிகள் தவிக்க விடுவார்கள் என்று பார்த்தால் நிஜத்தில் உ படக்குழுவினரை தவிக்க விட்டார் அந்தக் கதாநாயகி.

அதன்பின் புது‌ச்ச்சேரியில் "மிஸ் தமிழச்சி"யாக தேர்வு செய்யப்பட்ட நேகா ஒரே நாளில் உ படத்திற்கு திடீர் கதாநாயகி ஆனார். படக்குழுவில் உள்ள அனைவருமே நண்பர்கள் தான். அந்த நண்பர்கள் குழுவில் ஒருவருக்கு தோழியாக இருந்த நேகா நடிக்க ஆர்வமாக இருப்பது தெரிந்து, நேகா போட்டோவை மெயிலில் அனுப்பச்சொல்லி, பார்த்து உடனடியாக ஓகே சொன்னார் இயக்குநர் ஆஷிக். அன்று மாலையே கொடைக்கானல் கிளம்பி வரச்சொல்லி படப்பிடிப்பு நடத்தி சென்னை திரும்பி இருக்கிறார்கள். நேகா கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்து புது‌ச்சேரியில் படித்து‌க் கொண்டிருக்கும் தமிழ் யுவதி. தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த தமிழ் கதாநாயகிகள் வரிசையில் நேகா புதுவரவு.

கிட்டத்தட்ட 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்தின் நான்கு பாடல்களும் பதிவாகி விட்டது. பாடல்களுக்கு இறுதிக்கட்ட மிக்ஸிங் வேலைகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.

சென்னை, கொடைக்கானல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ள படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உ படம், தம்பி ராமையா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum