தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதுச்சேரி மாணவி பாலியல் வல்லுறவு: இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள்

Go down

புதுச்சேரி மாணவி பாலியல் வல்லுறவு: இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் Empty புதுச்சேரி மாணவி பாலியல் வல்லுறவு: இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள்

Post  meenu Sat Mar 02, 2013 1:47 pm

புதுச்சேரி அருகே சில நாட்கள் முன்பு பேருந்து நடத்துநர் ஒருவராலும்
மாணவர் ஒருவராலும் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்த சம்பவம் தொடர்பில் புதுச்சேரியில் இரண்டாவது நாளாக
ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.





பொலிஸ் அதிகாரி தகவல்











தொடர்புடைய விடயங்கள்













புதுச்சேரி பொலிஸ் அதிகாரி செவ்வி

புதுச்சேரி பொலிஸ் அதிகாரி செவ்வி


கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க





பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர்-ஆசிரியர்
அமைப்புகள் உள்ளிட்டோர் சேர்ந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டங்களில்,
இவ்வழக்கில் சட்ட நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்
என்றும், பாதிக்கப்பட்ட மாணவிக்கும் அவர் குடும்பத்துக்கும் உதவிகள்
வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த குற்றச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.





மாவட்ட ஆட்சியர் பொறுப்பு அதிகாரி பேட்டி














புதுவை அதிகாரி செவ்வி

புதுவை அதிகாரி செவ்வி


கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க





பொலிஸ் விசாரணைகளில் இவர்கள் தமது குற்றத்தை
ஒப்புக்கொண்டதாக புதுச்சேரி கிராமப் பகுதிகள் பொலிஸ் பிரிவின்
கண்காணிப்பாளர் பழனிவேல் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் புதுச்சேரிக்கு வெளியில்
நடந்திருப்பதாலும், துரித விசாரணையும் சட்ட நடவடிக்கையும் வேண்டும்
என்பதாலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் சி.ஐ.டி. மத்திய புலனாய்வு
பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி உடல்நிலை தேறிவருகிறார்
என்றும் இவருக்கு உரிய சிகிச்சைகளும், இவருக்கும் இவரது
குடும்பத்தாருக்கும் மனநல ஆலோசனைகளும் ஆதரவும் வழங்கப்பட்டுவருவதாக புதுவை
மாவட்ட ஆட்சியர் பொறுப்பை தற்காலிகமாக கவனித்துவருகின்ற அரசாங்க செயலர்
எஸ். சுந்தரவடிவேலு பிபிசியிடம் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கொடுக்க
வந்த புகாரை ஏற்பதில் புதுவை பொலிசார் முதலில் சுணக்கம் காட்டினார்களா
என்பது தொடர்பில் பொலிஸ்துறைக்குள் உள்மட்ட விசாரணை ஒன்று நடத்தப்படுகிறது
என்றும் அவர் தெரிவித்தார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum