தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தில்லி மாணவி பாலியல் வல்லுறவு: வழக்கை இடம் மாற்றக் கோரும் மனு தள்ளுபடி

Go down

தில்லி மாணவி பாலியல் வல்லுறவு: வழக்கை இடம் மாற்றக் கோரும் மனு தள்ளுபடி Empty தில்லி மாணவி பாலியல் வல்லுறவு: வழக்கை இடம் மாற்றக் கோரும் மனு தள்ளுபடி

Post  meenu Sat Mar 02, 2013 1:19 pm

தில்லி மாணவியை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தியதாகவும், கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும்
நபர்கள், தம் மீதான வழக்கை தில்லியிலிருந்து இடம் மாற்ற வேண்டும் என்று
தொடுத்திருந்த மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக
பொதுமக்களிடம் காட்டமான உணர்வலைகளும் அழுத்தமும் இருந்துவருவதால், வழக்கை
வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்
தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அந்த சட்டத்தரணி தன் சார்பில் வாதிடுபவர்
அல்ல, வேறொரு சட்டத்தரணிதான் தன் சார்பில் வாதிடப்போகிறார் என்று
குற்றம்சாட்டப்பட்டவர் கூறிய நிலையில், வழக்கை இடமாற்றக் கோரிய மனுவை
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட பதின்ம வயது
நபரை சட்டரீதியில் இளம் பிராயத்தவராக கருதப்பட்டு அவர் மீது வழக்கு
முன்னெடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இளம் பிராயத்தவராக அவர் கருதப்படும்போது அவருக்கு
அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையே வழங்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தில்லி பாலியல் வல்லுறவு வழக்கு விரைவு நீதிமன்றத்தில் ஆரம்பித்தது
» மிருகதனமான பாலியல் வல்லுறவு: ஆசிரியர் சிதைத்த மாணவி மருத்துவமனையில்
» புதுச்சேரி மாணவி பாலியல் வல்லுறவு: இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள்
» பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
» சிங்கள மொழி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum