தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேருந்தில் சென்ற பெண் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் - இம்முறை பஞ்சாபில்...

Go down

பேருந்தில் சென்ற பெண் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் - இம்முறை பஞ்சாபில்... Empty பேருந்தில் சென்ற பெண் மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் - இம்முறை பஞ்சாபில்...

Post  meenu Sat Mar 02, 2013 1:33 pm

பேருந்தில் சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்திய வேறொரு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில்
ஆண்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழாவது நபரைப் பொலிசார் தேடிவருகின்றனர்.

பேருந்தில் தனியொரு பயணியாக இந்தப் பெண் இருந்த
சந்தர்ப்பத்தை அப்பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் பயன்படுத்திக்கொண்டு,
அப்பெண்ணின் கிராமத்தில் வண்டியை நிறுத்தாமல் ஒதுக்குறமான வீடொன்றுக்கு
வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று மேலும் ஐந்து பேரை அவ்விடத்துக்கு
வரவழைத்து மாற்றி மாற்றி அப்பெண்ணை வன்புணர்ச்சி செய்துள்ளனர் என்று
பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தில்லியில் சென்ற மாதம் இதேபோல இளம் மாணவி ஒருவர்
பேருந்தில் வைத்து பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு
கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு,
பாலியல் வல்லுறவுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற
குரல்களையும் ஒலிக்கச்செய்திருந்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் வல்லுறவு: தேங்காய் வாங்க சென்ற பெண் சிதைப்பு: காமுகன் கைது
» இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!
» இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பெண் மீது 8 பேர் இணைந்து பாலியல் பலாத்காரம்.
» மூன்று இடங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு! இரு சிறுமிகள்,பெண் பலாத்காரம்!
» மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum