தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்தார் பாடகி எஸ் ஜானகி

Go down

பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்தார் பாடகி எஸ் ஜானகி Empty பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்தார் பாடகி எஸ் ஜானகி

Post  meenu Sat Mar 02, 2013 1:20 pm

மூத்த திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி, இந்திய மத்திய அரசு இந்த ஆண்டு தனக்கு வழங்கியுள்ள பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்துள்ளார்.

இந்த விருது தனக்கு மிகவும் தாமதமாக
வந்துள்ளதாகவும், தென்னிந்தியர்களை விட வட இந்தியர்களுக்கே இந்த
விருதுகளில் அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாலும் தான் இந்த விருதைப்
புறக்கணிப்பதாக ஜானகி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிந்தியாவில்
ஜானகியின் குரலை அறிந்திருக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று சொல்லும்
அளவுக்கு பல தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் கவர்ந்திழுத்த திரைப்படப் பாடகி
எஸ் ஜானகி ஆவார்.





பாரபட்சம் காட்டப்படுவதில்லை






அமைச்சர் நாராயணசாமி











விருது தேர்வில் பாரபட்சமோ அரசியல் தலையீடோ இல்லை: நாராயணசாமி

இந்திய அரசின்
விருதுகளுக்காக நபர்களைத் தெரிவுசெய்வதில் பாரபட்சமோ அரசியல் தலையீடோ இல்லை
என மத்திய அமைச்சர் நாராயணசாமி வாதிடுகிறார்.


கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க





1957ஆம் ஆண்டு தொடங்கி 55 வருடங்களாய் ஜானகி திரைப்படங்களில் பாடிவருகின்றார்.

தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் உட்பட்ட
தென்னிந்திய மொழிகளில் பெரும்பான்மையாகவும் ஹிந்தி உட்பட வேறு பல
மொழிகளிலுமாக பதினையாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் இவர் பாடியுள்ளார்.

குடியரசு தினத்துக்கு முன்பாக இவ்வாண்டின் 'பத்ம'
விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில், பத்ம பூஷன் விருது தனக்கு வழங்கப்படவிருப்பதை அறிந்த ஜானகி, இந்த
விருதைத் தான் ஏற்க மறுப்பதாக அறிவித்திருக்கிறார்.

குற்றச்சாட்டு





பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்தார் பாடகி எஸ் ஜானகி 111110154421_narayanasamiv_304x171_bbc_nocreditஅமைச்சர் நாராயணசாமி



இந்திய அரசின் விருதுகளுக்காக நபர்களைத்
தேர்ந்தெடுக்கும்போது வட இந்தியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும்,
தென்னிந்தியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் ஜானகி கூறியதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு மொழிகளிலும் ரசிகர்கள் தனக்கு வழங்கிய அங்கீகாரமே பெரிய விருது என்றும் ஜானகி கூறியுள்ளார்.

இந்த விருது தனது தாய்க்கு மிகவும் தாமதமாக வந்துள்ளது என்று ஜானகியின் மகன் முரளிகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி மறுப்பு


விருதை வழங்கியதில் தாமதம் என்றும், வட
இந்தியர்களுக்கு முன்னுரிமை என்றும் ஜானகி தரப்பில் தெரிவிக்கப்படும்
குற்றச்சாட்டுகள் பற்றி மத்திய அரசு இணை அமைச்சர் வி நாராயணசாமி
தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

நிபுணர் குழுவின் மூலமாக பல்வேறு நபர்களையும்
முறையாகப் பரிசீலித்து அவர்களின் பரிந்துரை அடிப்படையிலேயே விருதுகள்
வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

வட இந்திய தென்னிந்திய பாரபட்சமோ, முன்கூட்டியே
வழங்குதல் தாமதமாக வழங்குதல் என்ற பேதமோ, அரசியல் தலையீடோ இவ்விஷயத்தில்
இல்லை என்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி
குறிப்பிட்டார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum