தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோபம் இல்லை – பத்ம பூஷன் விருதை மறுத்த ஜானகி

Go down

கோபம் இல்லை – பத்ம பூஷன் விருதை மறுத்த ஜானகி Empty கோபம் இல்லை – பத்ம பூஷன் விருதை மறுத்த ஜானகி

Post  ishwarya Thu Mar 28, 2013 1:45 pm

மத்திய அரச தந்த பத்ம பூஷன் விருதை மறுத்தாலும் மத்திய அரசு மீது எனக்கு எந்த கோபமும் இல்லை என பிரபல பாடகி எஸ்.ஜானகி தொப்வித்தார்.

பத்ம விருதுகள் விஷயத்தில் மத்திய அரசு எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே தென்னிந்திய கலைஞர்களை அணுகிறது. மாபெரும் கலைஞர்களான நாகேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சௌந்தர்ராஜன் போன்றவர்களை அவர்கள் கண்டு முறையாக கௌரவித்ததே இல்லை. காலம் கடந்து போனால் போகிறது என்பது போல் நாகேஷை கௌரவித்தார்கள்.

இந்நிலையில் இந்த வருட பத்ம பூஷன் விருதுக்கு பிரபல பாடகி எஸ்.ஜானகியை மத்திய அரசு தேர்வு செய்தது. 55 வருடங்களாக திரைப்படங்களில் பாடிவரும் ஜானகி இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

தென்னிந்திய கலைஞர்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் காலம் கடந்து தந்த இந்த விருதை ஏற்பதில்லை என்றும், அதற்காக மத்திய அரசிடம் தனக்கு எவ்வித கோபமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்தது குறித்து அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் முறைப்படி அவரிடம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி பத்ம் பூஷன் எல்லாம் தேவையில்லை, பாரத ரத்னா தந்தால் பார்க்கலாம் என்றும் ஜானகி தெரிவித்தார்.

(கொஞ்சம் அதிகம்தான் இல்லையா?).

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum