ராணுவ அதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி
Page 1 of 1
ராணுவ அதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் தரைப்படையில் பணியாற்றிய முன்னாள் கமாண்டர் ஏ.கே. லால், பெண் அதிகாரி நேகா ராவத்திடம் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரை பதின்டாவில் உள்ள ராணுவ நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் ராணுவ அதிகாரி லாலை பதவி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்றாலும் லாலுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லாலுக்கு எதிராக ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில் ஆதாரம் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கேப்டன் நேகா ராவத், லாலுக்கு எதிராக பாலியல் புகார் கூறியிருந்தார். லாலின் வீட்டில் நடைபெற்ற யோகா பயிற்சியின் போது தன்னிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக நேகா குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை உறுதி செய்து, ராணுவ நீதிமன்றம் சனிக்கிழமையன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் இதுபோன்ற புகாரில் சிக்கி, தண்டனை பெறுவது முதல்முறையாகும்.
லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.எஸ். சுஜ்லானா தலைமையிலான 10 கமாண்டர்களைக் கொண்ட ராணுவ நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
ராணுவ சட்டத்தின் கீழ் பதவி நீக்க உத்தரவு உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேல்முறையீட்டிலும் லாலுக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவரது ஓய்வுகால சலுகைகள் எதுவும் கிடைக்காது.
என்றாலும் உயர் நீதிமன்றத்திலோ அல்லது ராணுவப் படையினருக்கான நடுவர்மன்றத்திலோ லால், மேல்முறையீடு செய்ய முடியும்.
இதன்மூலம் ராணுவ அதிகாரி லாலை பதவி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்றாலும் லாலுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லாலுக்கு எதிராக ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில் ஆதாரம் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கேப்டன் நேகா ராவத், லாலுக்கு எதிராக பாலியல் புகார் கூறியிருந்தார். லாலின் வீட்டில் நடைபெற்ற யோகா பயிற்சியின் போது தன்னிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக நேகா குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை உறுதி செய்து, ராணுவ நீதிமன்றம் சனிக்கிழமையன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் இதுபோன்ற புகாரில் சிக்கி, தண்டனை பெறுவது முதல்முறையாகும்.
லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.எஸ். சுஜ்லானா தலைமையிலான 10 கமாண்டர்களைக் கொண்ட ராணுவ நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
ராணுவ சட்டத்தின் கீழ் பதவி நீக்க உத்தரவு உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேல்முறையீட்டிலும் லாலுக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவரது ஓய்வுகால சலுகைகள் எதுவும் கிடைக்காது.
என்றாலும் உயர் நீதிமன்றத்திலோ அல்லது ராணுவப் படையினருக்கான நடுவர்மன்றத்திலோ லால், மேல்முறையீடு செய்ய முடியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீதான ஹெரோயின் குற்றச்சாட்டு உறுதி!
» இந்தியாவுக்குள் ஊடுருவ 200 பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர்: ராணுவ அதிகாரி தகவல்
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம்: உமாபாரதி குற்றச்சாட்டு
» ஹெலிகாப்டர் ஊழல் பிரச்சினையில் கருணை காட்ட மாட்டோம் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உறுதி
» பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்........
» இந்தியாவுக்குள் ஊடுருவ 200 பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர்: ராணுவ அதிகாரி தகவல்
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம்: உமாபாரதி குற்றச்சாட்டு
» ஹெலிகாப்டர் ஊழல் பிரச்சினையில் கருணை காட்ட மாட்டோம் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உறுதி
» பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum