தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புங்கை மரத்தின் வேரின் மகிமை

Go down

புங்கை மரத்தின் வேரின் மகிமை Empty புங்கை மரத்தின் வேரின் மகிமை

Post  meenu Thu Feb 14, 2013 1:16 pm


புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.

அந்த புங்கை மரத்தின் வேருக்கு அதிக மகத்துவம் உண்டு.

புங்கன் வேரை பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி இருவேளை குடித்து வர ஆறாத புண், ரணங்கள் ஆறும்.

புங்கம் வேரை மெல்லியதாக சீவி பால் பிழிந்து, அதனுடன் சம அளவு தேங்காய்பால் சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொண்டு அதனை ஆறாத புண்கள், ரணங்கள் மீது தடவி வர விரைவில் ஆறும்.

புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum