தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரத்தின் இலை வகை

Go down

மரத்தின் இலை வகை Empty மரத்தின் இலை வகை

Post  oviya Sun Feb 10, 2013 5:43 pm

மரியங்கொழுந்து:

இதை காட்டு மரங் கொழுந்து என்றும் கூறுவர். அரோசகம், வாயில் நீர் ஊறல், வமனம், ரத்தாதி சாரம், சீதபேதி ஆகியவற்றை நீக்கும்.

கருவேலங்கொழுந்து:

இதை தயிரில் அரைத்து குடித்தால் பாஷாண வேகம் நீங்கும்.

புளி இலை:

வெப்பமான புளி இலையானது அழிவிரணம், சோபரோகம், பாண்டு, சிவந்த கண்வலி ஆகியவற்றை போக்கும்.

வேப்பிலை:

வேப்பிலையினால் புழுக்கள், பெருவியாதி, மாந்தம், மகா விஷம், சுரம்,அம்மை கொப்புளம் ஆகியவை தீரும்.

முருங்கை இலை:

அக்கினி மந்தம், உட்சூடு, சிரஸ்தாப நோய், பித்தம், கண்வலி ஆகியவை குறையும்.

அகத்தி இலை:

இதை சாப்பிட்டால் இடுமௌந்தும், மனச்சோர்வும் நீங்கும். கடுவானும், வாயும் உண்டாகும். உணவு சீரணமாகும்.

செவ்வகத்தி இலை:

கப தோஷத்தை உண்டாக்கும். பற்பல சிந்தூரம், நவநீத பஸ்பம், தாளக சுத்தி ஆகியவை செய்வதற்கு உதவும்.

பசுமுன்னை இலை:

அரோசகம், வீக்கம், கபம், கரப்பான் இவை உண்டாகும். வாத தோஷமும் அக்கினி மந்தமும், மயக்கமும் போகும்.

கறிவேப்பிலை:

கறிவேப்பிலை, அரோகம், சீதபேதியால் வரும் வயிற்று வலி, புராதன சுரம், மனச்சோர்வு ஆகியவற்றை போக்கும்.

சிற்றுழா இலை:

இரத்த மூலத்தையும், சீழ் மூலத்தையும் போக்கும்.

பேருழா இலை:

ஆசன வளையம் மூன்றினுள் உள் வளைய முளையையும், குதக கடுப்பையும் ஒழிக்கும்.

தென்னங்குருத்து:

கப தொந்தரவும், இரத்த மூலமும் நீங்கும்.

பனங்குருத்து:

பனங்குருத்தால் இரத்த மூலமும், அதிசாரமும் உண்டாகும்.

பேரீச்சங்குருத்து:

சிலேத்ம குன்மம் போகும்.

சிற்றீச்சங்குருத்து:

வயிற்றில் கட்டுப்பட்ட இரத்த வாத குன்மம் குறையும்.

மூங்கில் இலை:

குடல் சூலையும், வயிற்று வலியும், இரத்த தடிப்பும், பிரசவ காலத்தில் தங்கிய அழுக்கும் நீங்கும்.
இவை அனைத்தும் மரத்தின் இலை வகைக‌ள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum